புதன், 28 ஏப்ரல், 2010

வீடியோ சாட்டிங் செய்யும் போதுசிலவினோதங்களை செய்ய ஒரு இலவச மென்பொருள்

நண்பர்கள்,உறவினர்களுடன் வீடியோ சாட்டிங் செய்யும் போதுசிலவினோதங்களை செய்ய ஒரு இலவச மென்பொருள்
 http://depositfiles.com/files/09y7cvygp
  http://rapidshare.com/files/381155720/ManyCam.exe 

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

புலிகளின் இரணைமடு விமானத்தளம் இந்திய விமானப் படைக்குக் காணிக்கை!b

இலங்கை கடற்பரப்பில் சீனாவில் பிரசன் னம் தொடர்பான சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இந்திய விமானப் படையினருக் கான தளமொன்றை வன்னியில் அமைப்ப தற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கச்சதீவு-இந்தியா தொடர்பான பிரச்சி னையில் சீனாவின் தலையீடு தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் வன் னியில் விடுதலைப்புலிகள் அமைப்பினால் பயன்படுத்தப்பட்டு வந்த இரணைமடு விமா னத் தளத்தை இந்திய விமானப் படையினர் பயன்படுத்துவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதற்கமைவாக இந்திய உயரதிகாரிகள் தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்குமிடையில் சென்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்துத் தொலைத்தொடர்பு வச திகளும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் இரணைமடு உயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.




அண்மையில் ஏ-9 வீதியின் கிழக்குப் பகு தியில் சில கிராமங்களில் மக்கள் மீளக்குடிய மர்த்தப்படவுள்ளதாக அரச அதிபர் அறிவித்த போதும் இப் பகுதியில் மக்கள் குடியமர்த்தப்படாமைக்கு இதுவே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



எனினும் இவ்வாறான தகவல்கள் வெளி யாகியுள்ள போதும் குறிப்பாக வடக்கில் பலாலி விமான நிலையம் உட்பட வன்னியில் விமான ஓடுதளம் மற்றும் விமானப் படைத் தளம் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் இந்தியாவுக்கு வழங்கியிருப்பதன் அடிப்படையிலேயே இந்திய வான்படை அதிகாரிகள் மற்றும் வான் படை நிர்மாணத்துறைப் பிரிவினர் நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறான தகவல்கள் வெளியாகியுள்ள போதும் இலங்கை -இந்திய தரப்புக்கள் உத்தியோகபூர்வமாக எந்தத் தகவல்களையும் வெளியிடவில்லை.

சனி, 24 ஏப்ரல், 2010

உங்கள் விண்டோஸ் XP கம்ப்யூட்டரில் தமிழை எளிதாக டைப் செய்ய வேண்டுமா? கீழ்காணும் மென்பொருளை பதிவிறக்கி நிறுவிக் கொள்ளவும்.

உங்கள் விண்டோஸ் XP கம்ப்யூட்டரில் தமிழை எளிதாக டைப் செய்ய வேண்டுமா?
கீழ்காணும் மென்பொருளை பதிவிறக்கி நிறுவிக் கொள்ளவும்.



Down load here

நீங்கள் இனிய இல்லம் அமைக்க விரும்புகிறீர்கள?


m

பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
http://depositfiles.com/files/eq9qb3t80

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

புலனாய்வுத்துறையினர் எனக் கூறி மேற்கொள்ளப்பட்ட கடத்தல் நாடகம் - மீண்டவர்களில் ஒருவர் விபரிப்பு

கடத்தல்காரர்கள் இராணுவப் புலனாய் வாளர்கள் எனத் தெரிவித்து அண்மைய சில நாள்களாகப் பழகி வந்ததாகக் கடத்தப்பட்ட வர்களில் ஒருவரான மகேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, கராச் உரிமையாளரான மகேந்திரனுடன் கடத்தல் காரர்கள் அண்மைக்காலமாகத் தாம் இரா ணுவப் புலனாய்வாளர்கள் எனத் தெரிவித்து தொடர்பை ஏற்படுத்தினர். இந் நிலையில் கடந்த திங்கட்கிழமை மகேந்திரனுடன் தொடர்பு கொண்ட கடத்தல் காரர்கள் தாம் கொழும்புக்குச் செல்லவுள்ள தாகவும் தமக்குப் பலகாரங்கள் பிடிக்கும் என வும் இருந்தால் கொண்டு வந்து தருமாறும் கேட்டிருந்தனர். இதனால் பலகாரங்களைக் கொண்டு செல்லும் போது தொழில் ரீதியாக நட்பு வைத் திருந்த மகேந்திரன் என்னையும் அழைத்துச் சென்றார்.

அப்போது யாழ்.பிரதம தபாலகத்திற்கு முன்பாக நின்ற கடத்தல்காரர்கள் என்னை அங்கு விட்டுவிட்டு மகேந்திரனை மட்டும் அழைத்துச் சென்றனர். பின்னர் சில மணி நேரத்தில் திரும்பி வந்த மகேந்திரன் என்னை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந் தார். இந் நிலையில் மறுநாள் செவ்வாய்க் கிழமை காலை 6.30 மணிக்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மகேந்திரன், இரா ணுவப் புலனாய்வாளர்கள் (கடத்தல்காரர் கள்) வருமாறு அழைத்ததாகவும் அங்கு போவ தற்கு என்னையும் வருமாறு கேட்டார்.

இதற்கமைய மகேந்திரனின் வீட்டிருந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் யாழ்.நகருக் குப் புறப்பட்டோம். அப்போது யாழ்.நகரில் தரித்து நின்ற கடத்தல்காரர்களில் ஒருவர் என் னை இறக்கி விட்டு மகேந்திரனின் மோட்டார் சைக்கிளில் அவரை மட்டும் அழைத்துச் சென்றார்.

பின்னர் அரைமணி நேரத்தில் மகேந்திர னின் மோட்டார் சைக்கிளில் வந்த கடத்தல் காரர் என்னையும் அழைத்துச் சென்று வீடொன்றில் தங்க வைத்தார்.அந்த வீட்டிற்குள் சென்றபோது கம்பிகள், இரும்புச் சட்டங்கள் காணப்பட்டதுடன் இரத்தக் கறையும் சுவரில் படிந்திருந்தது. அறைக்குள் கொண்டு சென்று சில நிமிடங்களில் பின் பக்கமாக வந்த ஒருவர் எனது கண்களை மூடி துணி ஒன்றைக் கட்டினார்.

பின் இரும்புச் சங்கிலியால் இரண்டு கைகளையும் சேர்த்து வரிந்து கட்டினார். பின்னர் எனது வீட்டுத் தொலைபேசி இலக்கத்தைக் கூறுமாறு கேட்டார். எனக்குத் தெரியாது எனக் கூற மிரட்டினார். அதனால் எனது கைத்தொலைபேசியை அவரிடம் வழங்கி அதில் உள்ளதாகத் தெரிவித் தேன். பின்னர் அவர் எனது வீட்டிற்குத் தொடர்பு கொண்டு கப்பம் கோரியதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.

அதன் பின் எனது வாய்க்குள் துணியை வைத்துவிட்டனர் என்றார். இதேவேளை நடந்த சம்பவங்கள் எவையும் தமக்குத் தெரியாது எனக் கடத்தப்பட்டவர்கள் அடைக்கப்பட்ட வீட்டுக்கு அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.சம்பவம் இடம்பெற்ற இரவு கூக்குரல் கேட் டதாகவும் தாம் சென்று விசாரித்தபோது எது வும் தெரியவரவில்லை எனவும் கூறினர்.

மானிப்பாய் பொலிஸார் அதிரடி - கப்பம்கேட்டு கடத்தப்பட்ட இருவரும் மீட்கப்பட்டனர் - கடத்தல்காரர்கள் மூவரும் மாட்டிக் கொண்டனர்

நவாலி வடக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை கப்பம் கோரி கடத்தப்பட்ட இருவரும் மானிப்பாய்ப் பொலிஸாரால் நேற்று யாழ். சுண்டுக்குளிப் பகுதியில் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டனர். அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரையும் பொலி ஸார் கைது செய்தனர்.

கப்பப்பணம் செலுத்தச் சென்றபோது இருவரையும், கடத்தப்பட்டவர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டில் வைத்து ஒருவரையுமே பொலிஸார் கைது செய்தனர். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன ஜெயக்கொடி தகவல் தருகையில் நவாலி வடக்கைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான மகேந்திரன் (வயது 40) மற்றும் பரராஜசிங்கம் மகேஸ்வரன் (வயது 25) ஆகிய இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் மோட்டார் சைக் கிளில் யாழ். நகருக்கு சென்ற போது இனந்தெரியா தோரால் கடத்தப்பட்டனர்.

இதில் மகேந்திரன் மானிப்பாயில் கராஜ் நடத்திவருவதுடன் மகேஸ்வரன் வாகனங்களுக்கான மின் இணைப்பு வேலைகள் செய்பவர்.இருவரையும் கடத்திச் சென்று இனந் தெரியாத குழுவினர் மகேந்திரனின் குடும் பத்தினரிடம் 50 இலட்சம் ரூபாய் பணமும் மகேஸ்வரினின் குடும்பத்தினரிடம் 30 இலட் சம் ரூபாய் பணமும் கப்பமாக தொலைபேசி மூலம் கோரியிருந்தனர்.

மேற்படி தொகைப் பணத்தை ஒப்படைத்தால் மட்டுமே இருவரும் விடுவிக்கப்படுவர் என்றும் இது தொடர்பில் பொலிஸாரிடமோ படையினரிடமோ முறையிடக் கூடாதெனவும் கடத்தல்காரர்கள் மிரட்டியிருந்தனர்.இந் நிலையில் தமது கப்பத் தொகையை நேற்று முன்தினம் இரவு குறைத்துக் கேட்ட கடத்தல்காரர்கள் 25 இலட்சம் ரூபாய் பெறு மதியான தங்க நகையும் ஒரு இலட்சம் ரூபாய் பணமும் ஒப்படைத்தால் இருவரையும் விடுவிக்க முடியும் என கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அறிவித்தனர்.

அத்துடன் குறித்த தங்க நகைகளையும் பணத்தையும் சங்கானைச் சந்தைக்கு முன்பாக கொண்டுவருமாறும் வரும் போது வாகனத்தின் அடையாளத்தை தெரிவிக்குமாறும் கடத்தல்காரர்கள் தெரிவித்தனர். இந் நிலையில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளையும் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தையும் ஆட்டோ ஒன்றில் மானிப்பாய் பொலிஸார் கொண்டு சென்றனர்.அப்போது நகைகளையும் பணத்தையும் பெறுவதற்கு கடத்தப்பட்ட மகேந்திரனின் மோட்டார் சைக்கிளில் வந்த கடத்தல் காரர்கள் இரு வரை சங்கானை சந்தைப்பகுதியில் வைத்து மானிப்பாய் பொலிஸார் கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் மேற் கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கடத்தப் பட்ட இருவரும் தங்கவைக் கப்பட்டிருந்த சுண்டுக்குளி சுவிட்ச் லேனில் உள்ள வீட்டுக்கு பொலிஸார் சென்றனர்.குறித்த வீட்டில் கடத்தல்காரர் ஒருவர் காவல் இருக்க கடத்தப்பட்ட இருவரும் தனித் தனி அறையில் வாய்,கைகள்,கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தனர்.உடனடியாக குறித்த இருவரையும் மீட்டதுடன் கடத்தல் காரர்களின் மூன்றாவது நபரையும் பொலிஸார் கைது செய்தனர் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன ஜெயக்கொடி தெரிவித்தார்.

இதேவேளை இக்கடத்தல் கும்பலுக்கும், நவாலி அட்டகிரியில் வைத்து சிறுவன் கடத்தப் பட்ட சம்பவத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லையயன பொலிஸார் தெரிவித்தனர்

வியாழன், 22 ஏப்ரல், 2010

சிங்கள மக்களின் சிறந்த தலைவரான மகிந்த நாட்டின் சிறந்த தலைவராவாரா?

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசு எந்தவிதமான ஆர்வத்தையும் காட்டுவ தாக தெரியவில்லை.யுத்தம் முடிந்து விட்டது. யுத்தத்தில் அரசுக்கு வெற்றி என்ற நினைப்பு இனப்பிரச்சினைக்கான தீர்வைப்பற்றி அரசு சிந்திக்காமல் விடுவதற் கான காரணமாக இருக்குமாயின் மீண்டும் ஓர் இனயுத்தம் இந்த மண்ணில் நிகழ்வதற்கான வாய்ப்பு நிறையவேயுண்டு. இந்தக் கருத்து அரசியல் பின்னிலையில் நின்றோ அல்லது அரசியல்வாதிகளின் பிரகடன பாவனையில் நின்றோ நாம் கூறவில்லை.

மாறாக இறைகொள்கை, ஆன்மீகச் சிந்தனை என்பவற்றின் அடிப்படையில் நின்று உலக நியதியை கூறுகின்றோம். இந்நியதியை எவர் நிராகரிக்கின்றாரோ அவர் தோல்வி காண்கிறார் என்பதே தத்துவம். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சிறந்த தலைவ ராக சிங்கள மக்கள் கருதுகின்றனர்.

அவர்களின் கருத்து நிலையானது. விடுதலைப்புலிகளைக் தோற்கடித்தவர். சிங்கள மக்களாகிய எமக்கு அச்சமற்ற வாழ்வைத்தந்தவர். நாங்கள் வடக்குக் கிழக்கு எங்கும் செல்லக் கூடிய வழியைக் காட்டியவர்.

எங்கெல்லாம் அரச மரங்கள் நிற்கின்றனவோ அங்கெல்லாம் புத்தபிரானின் சிலையை பிரதிஷ்டை செய்யும் சுதந்திரத்தை ஏற்படுத்தியவர். எனவே அவர் சிறந்த தலைவர் என சிங்கள மக்கள் எண்ணுகின்றனர்.ஆனால் தமிழ், முஸ்லிம் மக்களின் பார்வையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எத்தன்மையினராகக் கருத்தப்படுகின்றார் என்பது இங்கு கவ னிக்கப்பட வேண்டிய விடயமாகும். ஏனெனில், மகிந்த ராஜபக்  இந்த நாட்டின் ஜனாதிபதி. அவர் தனித்து சிங்கள மக்களின் தலைவர் அல்ல.

ஆக, இந்த நாடு முழுவதற்கும், தலைவராக இருக்கக் கூடியவர். எல்லா இன மக்களின் மனங்களையும் வெல்லும் போதுதான் நாட்டின் சிறந்த தலைவராக முடியும்.இருந்தும் துரதிர்ஷ்டவசமாக இன்று வரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிங்கள மக்களின் சிறந்த தலைவராகவே இருக்கின்றார். இந்நிலைமையானது இன ஒற்றுமைக்கும் நாட்டின் சமாதானத்திற்கும் ஆரோக்கியமாக அமையமாட்டா?

தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மை மக்கள் குறித்தும், ஆட்சி குறித்தும் அச்சமடைந்தவர்களாக இருப்பார்களாயின் நாட்டில் யுத்தம் முடிந்திருந்தாலும் மனப் போராட்டம் முடிபு பெறயில்லை என்றே கூறவேண்டும்.எனவே சிங்கள மக்களின் சிறந்த தலைவராக இருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட் டின் சிறந்த தலைவராக தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இதற்காக அவர் செய்ய வேண்டியது; தமிழ், முஸ்லிம் மக்களும் சிங்கள மக்கள் அனுபவிக் கின்ற சுதந்திரத்தை, உரிமையை வழங்குவதாகும். இதை விடுத்து தனித்து சிங்கள மக்களை மட்டுமே திருப்திப் படுத்துபவராக அவர் இருப்பாராயின், தற்போது அவருக்குக் இருக்கக்கூடிய குரு சந்திரயோகம் எப்படியும் எவராலும் இல்லாமல் போகலாம்.அதன் பின்னர் இதுவரை வென்ற வெற்றிகள் கூட அர்த்தமற்றவையாகிவிடும். சிந்தித்துச் செயற்படுவதே நன்று

thanks valampuri news paper

புதன், 21 ஏப்ரல், 2010

புலனாய்வுத் துறையினர் எனத் தெரிவித்து யுவதியை இழுத்துச் சென்ற இளைஞர்கள் - பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு

சி.ஐ.டியினர் எனக் கூறி யுவதியை பல வந்தமாக இழுத்துச் சென்று பாலியல் வல்லு றவு புரிந்ததாக தெரிவித்து இருவரை மானிப் பாய் பொலிஸார் கைது செய்தனர்.இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவ தாவது,

வவுனியா முகாமில் வசித்துவந்த சுமார் 20 வயதுடைய பிரஸ்தாப யுவதி நீண்டகாலத் துக்குப் பின் நேற்றுமுன்தினம் இரவு யாழ்ப் பாணத்துக்கு வந்துள்ளார்.யாழ்ப்பாணத்துக்கு வந்த அவர் கட்டுடை மானிப்பாயில் உள்ள தனது உறவினர் களுக்கு தன்னை அழைத்துச் செல்லுமாறு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார்.

இந் நிலையில் யுவதியை அழைத்துச் செல்ல உறவினர்கள் வந்தவேளை யாழ். பஸ் நிலையத்துக்கு வந்த இருவர் தம்மை சி.ஐ.டியினர் என அறிமுகப்படுத்தி விசாரணை செய்ய வேண்டும் எனத் தெரிவித்து அவ் யுவதியை அழைத்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து திகிலடைந்த உறவினர் கள் கட்டுடைப் பகுதி இளைஞர்களிடம் தெரி வித்துள்ளனர்.

சி.ஐ.டியினர் எனத் தெரிவித்த இளைஞர் களை அடையாளம் கண்ட உறவினர்கள் இளைஞர்களின் உதவியுடன் இரவிரவாக தேடுதல் மேற்கொண்டு மறுநாள் கட்டுடைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து குறித்த இளைஞர்களை மடக்கி பிடித்ததுடன் யுவதி யையும் மீட்டனர்.

பிடிக்கப்பட்டபோது இளைஞர்களில் ஒரு வர் தற்கொலை செய்ய முயற்சித்ததாகவும், மற்றையவர் கடுமையாக தாக்கப்பட்டதாக வும் தெரிவிக்கப்பட்டது.இவர்கள் இருவரும் மானிப்பாய் பொலி ஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரு கின்றனர். மருத்துவப் பரிசோதனைக்காக யுவதியும் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வலியுறுத்தும் எண்ணம் மாறவில்லை - நோர்வே அரசு தெரிவிப்பு

அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் இலங்கை அரசு பெரும் வெற்றியைப் பெற்ற போதும் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை அவர்கள் முன்வைக்க வேண்டும் என்ற எமது கொள்கைகளில் மாற்றங்கள் எதுவும் இல்லை என நோர்வே தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நோர்வேயின் நாடாளுமன்றத்தில் நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜோனாஸ் கார்ஸ்ரோர் இனால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அண்மையில் நடைபெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து இலங்கையில் புதிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால் நோர்வேயின் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படும் என்ற கருத்துக்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் தமிழ் மக்களின்பிரச்சி னைகளுக்கு ஒரு அரசியல் தீர்வுகாணப்பட வேண்டும் என்ற எமது கொள்கைகளில் மாற்றங்கள் இல்லை. விடுதலைப்புலிகள் பலம் தற்போது முற்றாக இல்லாது போயுள்ளது. ஜனாதிபதி ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்தலிலும் தற் போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் பெரும் வெற்றி பெற்றுள் ளார்.

நாம் முன்னர் ஜனாதிபதிக்குத் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில் கூட தமிழ் மக்களுக் கான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தோம். அவ்வாறான நிலைமைகளில் நோர்வே தனது உதவிகளை வழங்கும் எனவும் தெரிவித்திருந்தோம் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

குற்றவாளிகள் காட்டிக்கொடுக்கும் கிருமிகள்

தந்திரமாக செயல்பட்டு தப்பிவிடுவதில் குற்றவாளிகள் சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களை கைரேகை மற்றும் பிற அங்க அடையாளங்களை வைத்து கண்டுபிடிப்பது சிரமம். அவர்களை எளிதில் அடையாளம் காண புலனாய்வுக்குழுவினர் புது வழியை கண்டுபிடித்துள்ளனர்.
நுண்ணுயிரிகளான கிருமிகள் குற்றவாளிகளை காட்டிக்கொடுப்பதில் உதவும் என்பதே அந்த கண்டுபிடிப்பு. ஒருவரின் உடலில் பல லட்சக்கணக்கான நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. கண், முக்கு, குடல் என ஒவ்வொரு பகுதியில் வாழும் நுண்ணுயிரிகளும் வெவ்வேறு வகையாகவும், விதவிதமான பண்புகளையும் கொண்டவையாக இருக்கின்றன.
சாதாரண தொடுதலிலும் இந்த கிருமிகள் இடம் பெயருகின்றன. குறிப்பிட்ட காலத்துக்கு அங்கேயே அழியாமல் நிலைக்கின்றன. அதேபோல் ஒவ்வொரு மனிதனின் உடலில் உள்ள நுண்ணுயிரிகளும் வித்தியாசமாக இருக்கின்றன.
எனவே இதைக் கொண்டு புலனாய்வு செய்ய முடியும் என்று கொலரோடா (அமெரிக்கா) பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மெய்ப்பித்துள்ளனர். அவர்களது ஆய்வில் 70 முதல் 90 சதவீத அளவில் குற்றவாளிகளை அடையாளம் காணலாம் என்று தெளிவானது.
`பேக்டீரியல் ஜெனிடிக் சிக்னேச்சர்` எனப்படும் இந்த முறை, எளிதில் பயன்தரும் புதிய புலனாய்வு முறையாக எதிர்காலத்தில் வரப்போகிறது

பாடல்களுக்கு வரி சொல்லும் மென்பொருள்!


இந்த மென்பொருள் ஒரு பாடலுக்கான வரிகளை தேடும் வேலையை மிச்சமாக்குகிறது . ஆங்கிலம்,ஹிந்தி போன்ற அனைத்து பாடலுக்குமே இந்த மென்பொருள் வரிகளை தேடித் தருகிறது.ஆனால் இது தமிழ் பாடல்களின் சில பாடலுக்கு மட்டுமே வரிகள் தேடித் தருகிறது.எனினும் இதனை கையாளுவது மிக எளிது
சாதரணமாக ஏதாவது ஒரு ஊடக இயக்கியின்(media player) மூலம் ஒரு பாட்டை பாட வைத்தால் இந்த மென்பொருள் அந்த பாடலுக்கான வரியை இணையத்தில் தேடிக் கண்டுப்பிடித்து அந்த ஊட இயக்கியின் கீழ் கொண்டு வந்து சேர்த்து விடும் http://depositfiles.com/files/9qf01zvyt



வன்னியின் இன்றைய நிலைமை படங்கள்


வேதனையுடன் காலத்தை கழிக்கும் வன்னி மக்கள்


சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுக்கக் கூட்டு நடவடிக்கை - த.தே.கூ.-சி.மு.கா. பேச்சு

தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற் காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சிறிலங்கா முஸ்லிம் காங்கி ரஸும் இணைந்து செயற்படவுள்ளன. இது குறித்துப் பேசவருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிஸுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

நாவலப்பிட்டியில் மீள் தேர்தல் நடைபெற்ற பின்னர் கொழும்பில் இப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. பேச்சுவார்த்தைகளில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. சிறுபான்மை மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் பேணிப் பாதுகாக்கும் நோக்கில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ள தாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுபான்மை மக்களின் உரிமை களுக்காகக் குரல் கொடுக்கும் போது இணைந்து செயற்பட வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு, முஸ்லிம் காங்கிரஸிடம் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தமக்கு இந்த அழைப்பை விடுத்ததாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை வர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டி யில் மீள் தேர்தல்கள் நடைபெற்று முடிந்ததன் பின் னர் கொழும்பில் வைத்து இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மீள் தேர்தல் நடவடிக்கைகளுக்காக ரவூப் ஹக்கீம் தற்போது கண்டியில் பிரசாரங்களை மேற்கொண்டு வரு கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரி வித்துள்ளார்.

ஆளும் கட்சியில் பல பேரினவாத சக்திகள் இயங்கி வருவதாகவும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

இலங்கையிலுள்ள பொதுமக்களின் அச்சநிலை இன்னும் நீங்கவில்லை - மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கையிலுள்ள மனித உரிமைச் செயற்பாடுகளை நாம் உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். அங்கு தற்போதும் ஆபத்துக்கள் உள்ளன. அங்கு மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே காணப்படுகின்றது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறைக்கு சுட்டிக் காட்டியுள்ளது. அவுஸ்திரேலிய அரசு கடந்த 8ஆம் திகதி மேற்கொண்ட அகதிகள் தொடர்பான சட்ட விதிகளின் மாற்றம் எமக்கு ஆழ்ந்த கவலை தோற்றுவித்துள்ளது.

இது 1967 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அகதிகளின் உரிமைகளை மதிக்கும் விதிகளை முற்றாக மீறியுள்ளது என வாஷிங்டனைத் தளமாகக் கொண்ட அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அவுஸ் திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் கிறிஸ் இவானுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு,

அவுஸ்திரேலிய அரசு கடந்த 8ஆம் திகதி மேற்கொண்ட அகதிகள் தொடர்பான சட்ட விதிகளின் மாற்றம் எமக்கு ஆழ்ந்த கவலை தோற்றுவித்துள்ளது. 1951 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அவுஸ்திரேலியாவின் சட்டவிதிகளையும் 1967ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அகதிகளின் உரிமைகளை மதிக்கும் விதிக ளையும் அவுஸ்திரேலிய அரசின் தற்போதைய நடவடிக்கை முற்றாகவே மீறியுள்ளது.

இலங்கையிலும் ஆப்கானிஸ்தானிலும் நிலைமைகள் சீராகி வருவதால் அங்கிருந்து வரும் அகதி தஞ்சம் கோரும் மக்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதில்லை என்ற சட்டங்களை உடனடியாக நடை முறைக்குக் கொண்டு வருவதாக உங்களின் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆனால் இரு நாடுகளினதும் மனித உரிமை செயற்பாடுகளை நாம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். அங்கு தற்போதும் ஆபத்துக்கள் உள்ளன. அங்கு மக்களுக்கு பாதுகாப்புகள் அற்ற நிலையே காணப்படுகின்றது.ஆனால் அவுஸ்திரேலிய அரசின் அறிவித்தலை நோக்கும் போது எதிர்காலத்தில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் மக்களின் அகதி களிற்கான விண்ணப்பங்களை நிராகரிக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது. 

சில விடயங்களில் (மீள்குடியேற்றம்) முன்னேற்றமான நிலைமை ஏற்பட்டுள்ள போதும் அங்கு மக்களுக்கு முழுமையான பாதுகாப்புகள் அற்ற நிலையே காணப்படு கின்றது. அங்கு வாழும் சில இன மக்கள் அகதி தஞ்சம் கோருவதற்கு தகுதியானவர்கள். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் எதிர் கட்சி ஆதரவாளர்கள், உறுப்பினர்கள், ஊடக வியலாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் ஆகியோர் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றது. அவர்கள் கைது செய்யப்படுகின்ற னர். துன்புறுத்தப்படுகின்றனர்.

அரசை விமர்சிக்கும் ஊடக வியலாளர் கள் மீது தாக்குதல்களும் மேற்கொள்ளப் பட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்னர் அரசை விமர்சித்த ஊடக வியலாளர் காணாமலும் போயுள்ளார்.போர் நிறைவு பெற்று ஒரு வருடம் அண் மித்த நிலையிலும் அரசு அவசரகாலச் சட் டத்தை நீக்கவில்லை. அவசரகாலச் சட்டம் பாதுகாப்பு படையினருக்கு அதிக அதிகாரங் களை வழங்கி வருகின்றது. 

விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்ப டும் 9 ஆயிரம் பேரை அரசு தடுத்துவைத் துள்ளது. அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்களை அரசு மோசமாக நடத்துவதையும் அவர்கள் துன்புறுத்தப்படுவதையும் நாம் எமது ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளோம். அவுஸ்திரேலியாவுக்கு வரும் அகதிகளில் சிறுவர்களையும் குழந்தைகளையும் தடுத்து வைப்பதும் 2005 ஆம் ஆண்டு ஏற்படுத்தப் பட்ட இடம்பெயரும் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டத்தை மீறிய செயலாகும். ஆசிய-பசுபிக் பிராந்திய நாடுகளில் பல நாடுகள் அகதிகளுக்கான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில்லை.

எனவே அனைத்துலக சட்டங்களை மதிப்பதன் மூலம் அவுஸ்திரேலிய முன் உதாரணமாக விளங்க வேண்டும். இது தொடர்பில் நாம் உங்களுடன் மேல திக விவாதங்களை மேற்கொள்ள ஆவலாக உள்ளோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்றிக்கு வைத்தபொறியில் சிக்கிக்கொண்ட சிறுத்தை

வன்னியில் பன்றிக்கு வைத்த பொறியில் சிறுத்தைப் புலி ஒன்று சிக்கி உயிரிழந்த தாக தெரிவிக்கப்படுகின்றது.பொறியில் சிக்கிய சிறுத்தைப் புலி தப்பிக்க முயன்றபோது கழுத்து இறுக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது.

இச் சிறுத்தை விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வளர்த்ததாக இருக்கலாம் என செய்தி ஊடகங்கள் தெரிவித்தன. வன்னியில் இடம் பெற்ற கடும் யுத்தத்தின் காரணமாக வன விலங் குகள் நடுக்காட்டுக்குள் சென்றதாகவும் அவை தற்போது குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவித்தன. பொறியில் சிக்கிய சிறுத்தப் புலியை மீட்க வன விலங்கு அதிகாரிகள் வர தாமதமானதாலேயே அது உயிரிழந்ததாக கூறப்பட்டது.

வியாழன், 15 ஏப்ரல், 2010

கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்துவிடவே இலங்கை விரும்புகின்றது - அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் கருத்து

கடந்த காலங்களில் இடம்பெற்ற கசப்பான அனுபவங்களை மறந்து விடவே இலங்கை விரும்புவதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். தமிழ், சிங்களப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு யாலிய விக்கிரம சூரிய வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் தந்திரோபாயங்கள் மற்றும் பொருளாதார முக்கியத் துவம் ஆகியவற்றை உலக நாடுகள் தற்போது ஏற்றுக் கொண்டுள் ளன.பழையவற்றை மறந்து புதிய ஓர் சகாப்தத்தை நோக்கிச் செல்ல வேண்டிய காலம் மலர்ந்துள்ளது. அமெரிக்காவில் வாழும் இலங்கை யர்கள் ஒரே சமூகமாக அணி திரள வேண்டும்.

அண்மையில் நடைபெற்ற 2 முக்கியமான தேர்தல்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வெற்றி கிட்டியுள்ளதாகவும் அதன் மூலம் மகிந்த சிந்தனைகளை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளமை புலப்படுவ தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசு மீது போர்க் குற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்பதில் அமெரிக்கா இறுக்கமாக இருக்கும் நிலையில், அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதரின் மேற்கண்ட கருத்து இலங் கை அரசின் உயர்மட்ட ஆலோச னையில் வெளியிடப்பட்டதாக அரசி யல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதேவேளை இலங்கை அரசு மீதான போர்க் குற்ற விசாரணை யை அமெரிக்கா முன்னெடுப்ப தைத் தடுப்பதில் இலங்கை அரசு பல்வேறு உபாயங்களைக் கையாண்டு வருவ தாகவும் ராஜதந்திரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.*

புதன், 14 ஏப்ரல், 2010

தமிழ், சிங்கள மக்களுக்கு கிலாரி புதுவருட வாழ்த்து

இலங்கையில் யுத்தம் முடிபடைந்த பின் கொண்டாடப்படும் முதலாவது தமிழ், சிங்க ளப் புதுவருடத்தை முன்னிட்டு உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழ், சிங்கள மக்க ளுக்கு அமெரிக்க வெளியுறவுச் செயலர் கிலாரி கிளின்டன் புதுவருட வாழ்த்தைத் தெரி வித்துள்ளார்.

தொடங்கும் இப் புதுவருடம்முதல் தசாப் தத்தில் இலங்கையிலுள்ள அனைத்து மக்க ளும் ஒற்றுமையாக, சமாதானமாக கொண் டாடப்படவுள்ளது. இந்த சந்தர்ப்பம் அனைத்துத் தரப்பின ரையும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ் வோரையும் இணைத்து நம்பிக்கைகளுட னும் புத்துணர்ச்சியுடனும் ஜனநாயகப் பண்புகளை மதித்தும் மனித உரிமைகளைப் பேணியும் கொண்டாடப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

நாளை மலர்கிறது விகிர்தி புத்தாண்டு..............

இந்துக்களின் தமிழ்ப் புதுவருடம் சித்திரை மாதத்தில்தான் ஆரம்பமாகிறது. அதாவது மேஷ ராசியில் இருந்து மீன ராசி வரை பன்னிரண்டு ராசிகள் சூரியன் செல்லுகின்ற கதியை நிர்ணயிக்கின்றன.

ஒவ்வொரு ராசியிலும் சூரியன் வரும்போது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரியன் சஞ்சரிக்கும் காலங்களே ஒவ்வொரு சூரிய மாதமாகக் கணக்கிடப்படுகிறது.

சித்திரை முதல் பங்குனி வரை 12 மாதங்களைக் கொண்டதே ஒரு தமிழ் வருடமெனக் கொள்வது எம்முடைய மரபாகும்.

புதுவருடத்தை கணக்கிடும்போது சூரியனை முதலாகக் கொண்ட காரணத்தால் 'சௌரமானம்'' என்ற பெயரும் வழங்கப்படுகிறது.

அதுபோல சந்திரனைக் கொண்டு புது வருடத்தைக் கணக்கிடும் முறைக்கு 'சாந்தரமானம்'' என்ற பெயர் வழங்கப்படுகின்றது.

'சாந்தரமானம்'' முறை மூலம் புது வருடத்தைக் கணிப்பவர்கள் பெரும்பாலும் ஆந்திர தேசத்தைச் சேர்ந்த தெலுங்கர்களாவர். ஆனால் தமிழர்களின் புதுவருடமானது 'சௌரமானம்' எனப்படுகிறது. அதாவது சூரிய தேவனை முழு முதலாகக் கொண்டு புது வருடத்தைக் கணிப்பதாகும்.

ஆண்டுகளைக் கணக்கிடுகின்ற முறை இடத்துக்கு இடம் இனத்திற்கு இனம் வேறுபாடு கொண்டு காணப்படுகிறது.

சர்வதேச ரீதியில் ஜனவரி முதல் டிசம்பர் வரையான 12 மாத காலப் பகுதியை ஆங்கில ஆண்டாகக் கணிக்கிறார்கள். இம்முறையைத் தான் அனைத்துலக மக்களும் பொதுத் தொடர்பு ஆண்டாகக் கைக்கொள்கிறார்கள்.

தெலுங்கு தேசத்தவர்கள் 'சாந்தரமானம்' முறையை கடைப்பிடிக்கிறார்கள். கேரள தேசத்தவர்கள் தமது ஆண்டு முறைமையை 'கொல்லம்' என்று கூறுகிறார்கள்.

இவ்வாறு இனத்திற்கு இனம் புது வருடப் பிறப்பு வேறுபட்டாலும் அனைத்து இன மக்களும் தமது புதுவருடப் பிறப்பை சம்பிரதாயபூர்வமாகக் கொண்டாடுவதற்கு மிகவும் விருப்பு உடையவர்களாக உள்ளார்கள்.

ஏப்ரல் மாத நடுப்பகுதியில் வருகின்ற சித்திரை மாதப் பிறப்புடன் பாரம்பரியமாக ஆரம்பமாகிறது 'தமிழ்ப் புதுவருடம்'.




இதைத்தான் சிங்கள பௌத்த மககளும் தமது வருடப் பிறப்பாகக் கொண்டாடும் மரபு உண்டு. இது இரண்டு இன மக்களிடையே காணப்படுகின்ற மிக முக்கியமான ஒற்றுமையாகும். இச்சித்திரைப் புதுவருடம்தான் தமிழ் - சிங்கள மக்களினது வருடத் தொடக்கமாகக் கைக்கொள்ளப்படுகிறது.

எந்த ஒரு காரியத்திற்கும் அல்லது செயலுக்கும் தொடக்கமும் முடிவும் கட்டாயமாக உண்டு. அதை நம் ஆன்றோர்கள் மரபு வழியாக பேணி வருகிறார்கள்.

அதே போலத்தான் புது வருடத்தையும் காலங் காலமாக நாம் கொண்டாடி வருகிறோம். 'நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்' எனக் கருதி சித்திரையை மகிழ்வுடன் வரவேற்கும் மரபு நம்மிடம் உண்டு.

இதன் காரணமாக தமது மனதில் உள்ள துன்பங்கள், துயரங்கள், கோபதாபங்கள், பழைய பகைமை உணர்வுகள் ஆகியவற்றை மறந்து, மன்னித்து ஒரு புதிய நினைவுடன், புதிய உறவுடன் புதுவருடத்தை நாம் வரவேற்கும் விதத்தில் நம் பெரியவர்கள் கொண்டாட்டங்களை அமைத்துள்ளார்கள்.

'சித்திரைப் புதுவருடம்' எப்பொழுது தொடக்கம் கொண்டாடப்படுகிறது? இக்கேள்விக்குப் பதில் கூறுவது அவ்வளவு எளிதல்ல. காரணம் என்னவெனில் எழுத்து மூலமான எந்த ஆவணமும் இது தொடர்பாகக் கிடையாதென்பர்.

நம் முன்னோர்கள் வழி வழியாக, மொழி வழியாக செய்தவற்றை நல்ல நோக்கத்துடன் நாமும் பின்பற்றுகிறோம். ஆனாலும் முற்காலங்களில் 'வேங்கை' மரம் பூத்து புது வருடத்தை அறிவித்ததாகவும் அறியக் கிடக்கிறது.

இதன்மூலம் இளவேனிற் கால தொடக்கமான சித்திரையிலேயே புது வருடத்தை கொண்டாடும் வழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்துள்ளது என்பது புலனாகிறது. காலங்காலமாக சித்திரைப் புது வருடத்தை நாம் சில நடைமுறைகளுடன் கொண்டாடுகிறோம்.

அதிகாலையில் எழுந்து மருத்து நீர் தேய்த்து நீராடுவது நாம் பழங்காலந் தொட்டு செய்து வரும் மரபாகும். இம்மருத்து நீரில் சேர்க்கப்படும் பொருட்கள் உடல் நலத்திற்கு ஏற்றனவாக உள்ளன.

சித்திரை மாதம் என்பது பனி முடிந்து இளவேனிற் காலம் தொடங்கும் காலமாகும். இப்பருவ மாற்ற காலத்தில் எமது உடலை மருந்துகள் மற்றும் சடங்குகள் மூலமாக நம் பெரியோர்கள் காத்தார்கள். இதனால் தான் பல மூலிகைப் பயன்பாடு கொண்ட மருத்து நீர் தயாரிக்கப்பட்டு ஆலயங்களில் வழங்கப்படுகின்றது.

ஆலயங்களுக்குச் சென்று அதை வாங்கி வந்து வீடுகளில் உள்ள பெரியவர்களிடம் கொடுத்து அதிகாலையில் கிழக்கு நோக்கி நின்று அதை தலையில் வைப்பது பாரம்பரியமான ஒரு நடைமுறையாகும்.

தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணு கிரந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு போன்றவற்றை தூய்மையான நீரில் சேர்த்து காய்ச்சி மருத்து நீர் பெறப்படுகிறது.

தமிழ் வருடக் கணக்கில் 60 ஆண்டு சுழற்சியில் 'விரோதி' வருடம் சென்று 'விகிர்தி' வருடம் இவ்வாண்டு பிறக்கிறது. இவ்விகிர்தி வருடம் 14.04.2010 அன்று (தமிழுக்கு சித்திரை முதலாம் திகதி) பிறக்கிறது.

இப்புண்ணிய காலத்தில் சிரசில் விளா இலையும் காலில் கடப்ப இலையும் வைத்து மருத்து நீர் கொண்டு நீராடி பொன்னிற பட்டு ஆடை அல்லது வெள்ளை, சிகப்புக் கரை அமைந்த பட்டாடை அணிந்து பவளம், முத்து, வைரம், புஸ்பராகம் இழைத்த ஆபரணம் அணிந்து சுகந்த சந்தணம் பூசி, நறுமலர்கள் சூடி மகிழ வேண்டும்.

அத்துடன் குல தெய்வங்களை வணங்கி சூரியனுக்குப் பொங்கலிட்டு புது வருடத்தைக் கொண்டாட வேண்டும்.

சித்திரைப் புது வருடத்தன்று எம்மால் ஆன அறங்களைச் செய்ய வேண்டும். தான தர்மங்களைச் செய்தல் மாத்திரமின்றி தெய்வம், குரு, பெற்றோர் ஆகியோரை வணங்கி ஆசி பெற்று ஊரும் உறவும் சூழ நண்பர்களுடன் அறுசுவை உணவுகளை உண்டு மகிழ்தல் பொதுவான கொண்டாட்டமாகும்.

புது வருடத்தன்று 'வேப்பம்பூ பச்சடி' சிறப்பானதாகும். வேப்ப மரம் மருத்துவப் பயன் கொண்டது. சித்திரை பிறந்து விட்டால் வேம்பு பூக்க ஆரம்பித்து விடும்.

யாழ்ப்பாணத்து மக்கள் வேப்பம் பூ கொண்டு செய்யப்படும் வடகத்தை ஆண்டு முழுவதற்கும் பயன்படுத்துவார்கள். வாழ்க்கையில் இரவும் - பகலும், இன்பமும் - துன்பமும் ஒரு நாணயத்தில் இரண்டு பக்கங்களாகும்.

இதை உணர்த்துவதற்காக துவர்ப்பு சுவை கொண்ட வேப்பம் பூவுடன் இனிப்பு சுவை சேர்த்து புது வருடத்தன்று வேப்பம் பூ பச்சடி தயாரிக்கப்படுவது வழக்கமாகும்.

அறுசுவை உணவுடன் மற்றவர்களுக்கு தானமும் தர்மமும் செய்து புது வருடத்தை கொண்டாடுவதன் மூலம் ஆண்டு முழுவதும் நிறைவான வாழ்க்கையைப் பெற முடியும் என்பது நம் பெரியோர்களின் நம்பிக்கையாகும்.

சித்திரைப் புது வருடத்தில் காலையில் ஆலய தரிசனம் செய்த பின் குருமார்கள், ஆசிரியர்கள், பெரியோர்களை சென்று தரிசித்து ஆசி பெற்றுக் கொள்வதுடன் கைவிசேஷம் பெறுவதும் வழக்கமாகும்.

புத்தாண்டு தினத்தில் பெரியவர்களுடைய கரங்களில் இருந்து பெற்றுக் கொள்கின்ற எந்தப் பொருட்களும் வளரும் அல்லது பெருகும் என்ற நம்பிக்கை எம்மிடையே உண்டு.

பெரியவர்கள் என்றால் வயதில் பெரியவர்கள் மட்டுமல்ல, எண்ணத்திலும் பெரியவர்களாக இருக்க வேண்டும்.

அப்படிப்பட்டவர்களிடம் இருந்து நாம் பெறுகின்ற ஒரு ரூபா கூட பல்கிப் பெருகும். வாழ்க்கையிலே செல்வச் செழிப்பைக் கொடுக்கும். பஞ்சாங்கங்களில் கூறப்பட்டிருக்கின்ற கைவிசேஷத்துக்குரிய நேரங்களில் பெரியவர்களிடம் இருந்தோ அல்லது இறைவன் பாதத்தில் வைத்தோ கைவிசேஷத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

அது தவிர புதுவருடம் பிறந்த பின்னர் வேலை, வியாபாரம், புதுக்கணக்குப் பதிதல், ஏர் பூட்டுதல், புது விதைப்பு, புதுநெல் எடுத்தல், வித்தியாரம்பம், பொங்கலிடுதல், உறவினர்கள் வீடுகளுக்குச் செல்லுதல் போன்றவற்றை நல்ல நேரம் பார்த்து தொடங்கும் பழக்கம் தொன்று தொட்டு தமிழர்களிடையே இருந்து வருகிறது.

புது வருடத்தன்று மாலை நேரம் மகிழ்ச்சியான விளையாட்டுக்குரிய நேரமாக வகுக்கப்பட்டிருந்தது. மாலை நேரத்தில் மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி மிக முக்கிய விளையாட்டாக தமிழர்களிடையே இருந்து வந்துள்ளது.

இது தவிர போர்த் தேங்காய் உடைத்தல், ஊஞ்சல், கிட்டிப்புள், கிளித்தட்டு, எட்டுக்கோடு, கொக்கான் வெட்டுதல், பட்டம் விடுதல், கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுகளையும் விளையாடினார்கள்.

இவ்விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் தோல்வி ஏற்பட்டாலும் அதை வெற்றியாகக் கருதக்கூடிய மனப்பாங்கை பெரியவர்கள் வளர்த்தார்கள். மனதிலே பொறாமை உணர்வைக் களைந்து நட்பை வலுப்பெறச் செய்வதற்காக தமிழர் விளையாட்டுகள் உருவாக்கப்பட்டன.

எனவே பிறக்கின்ற புதுவருடத்தை வரவேற்று கொண்டாடுவோமாக.

திங்கள், 12 ஏப்ரல், 2010

தேர்தலின் பின் இலங்கை நிலைவரம் குறித்து

அணுசக்தி பாதுகாப்புத் தொடர் பான மாநாட்டில் கலந்து கொள் வதற்காக அமெரிக்கா சென்றுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அந் நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமா வுடன் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து முக்கிய பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார்.

இந்தச் சந்திப்பு இன்றும் நாளையும் வாசிங்டனில் இடம்பெறவுள் ளது. இலங்கையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் மகிந்த அரசுக் கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிட்டக் கூடிய அதிக வாய்ப்பு ஏற்பட்டிருப்பதால் இனிவரும் காலங்களில் இலங்கையில் ஏற்படக் கூடிய அரசியல் மாற்றங்களில் சர்வதேச சமூகத்தின் சக்தி எவ்வகையானதாக இருக்கப் போகின்றது. மற்றும் அதற்கான சாத்தியங்கள் என்ன என்பது குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்படலாம் என்று கொழும்பில் உள்ள இந்தியத்தூதரக வட்டா ரங்கள் தெரிவித்தன.

இதேவேளை இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகத் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்கத் துணைச் செயலர் றொபேட் ஓ பிளேக் கருத்துத் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி எப்போதும் கூறியி ருந்தார். அவ்வாறு பெற்றுக் கொள்வதானது இலங்கையின் அரசியல் அமைப்பைத் திருத்துவதற்கு அவருக்கு இடமளிக்கும். பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல் படுத்துவதில் தான் உறுதிப்பாட்டுடன் இருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த கூறியுள்ளார். இந்த 13-வது திருத்தமானது மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும்.

வட மாகாணம் உட்பட்ட மாகாணங்க ளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாக அது அமையும். நல்லிணக்கம் தொடர்பாக எப்போதும் அவர் உறுதிப்பாட்டுடன் இருப்ப தாக நான் நினைக்கின்றேன். அதனை இப் போது முன்னெடுப்பது மிகவும் முக்கியமா னது என்று நான் நினைக்கின்றேன் என்று கூறியுள்ளார்

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

தமிழ் மக்கள் எல்லோர் மீதும் நம்பிக்கை இழந்து விட்டனர் - யதார்த்தத்தைக் கூறுகின்றார் சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழ் மக்கள் எல்லோர் மீதும் நம்பிக்கையையிழந்துள்ளனர். அவர் கள் யாரையும் நம்பத் தயாரில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித் துள்ளார்இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித் துள்ளதாவது,

வடக்கு-கிழக்கு மக்களிற்கான அரசியல் தீர்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பாகவே நாம் அதிகம் கவனம் செலுத்துவோம்.

வடக்கு-கிழக்கு மக்கள் எமக்கு வாக்களித்தது எமது கொள்கைகளை ஏற்றுக் கொண்டதனால் தான். தமிழ் மக்களின் அரசியல் தீர்வையும் விரைவான மீள்குடியேற்றத்தையும் நாம் வலியுறுத்துவோம். அரசியல் அமைப்பு திட்டம் தொடர்பாக மக்கள் நம்பிக்கை இழந்ததே மிகக்குறைந் தளவு மக்கள் வாக்களிக்க காரணமாகியது. தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கோ அல்லது அரசுக்கோ வாக்களிப்பது ஆக்கபூர்வமான தல்ல என மக்கள் எண்ணுகின்றனர்.

தமிழ் மக்கள் எல்லோர் மீதும் நம்பிக்கையை இழந்துள்ளனர். அவர்கள் யாரையும் நம்பத் தயாராக இல்லை. நாம் 13 ஆசனங் களை பெற்றுள்ளோம். மேலும் ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தை பெறுவோம்.

தேர்தல் ஆணையகம் சீரான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் முல்லைத் தீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளிலும் மேலும் சில ஆசனங்களைப் பெற்றிருப்போம். வவுனி யாவிலிருந்து 4 ஆயிரம் இடம் பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்காக கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் அங்கு அவர்கள் வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்பட வில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் பேசத் தயார்

இதேவேளை தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கீழ் போட்டியிட்ட தாம் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் மொத்தமாக 13 ஆசனங்களை வென்றெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் தமிழர் பிரச்சினைக் காகவும் அரசியல் தீர்வுத் திட்டமொன்றின் அவசியம் குறித்தும் குரல்கொடுக்கப் போவதாகவும் விரிவாக்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கத் திட்டமொன்றின் அவசியம் விஞ்சி நிற்ப தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதி பதியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் எனவும் அரசியல் தீர்வுத் திட்டம் மற்றும் மீள் குடி யேற்றம் ஆகிய பிரச்சினைகளே பிரதான பிரச்சினைகளாகும் என குறிப்பிட்டுள்ளது

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

வெள்ளை பிராணிகள்

வெள்ளை நிறத்திற்கு எப்பவும் மகிமைஉண்டு அந்த வெள்ளை நிறத்தில் பிராணிகளை இங்கே காணலாம்

















சனி, 3 ஏப்ரல், 2010

சொக்லேட் சாப்பிட்டால் இதய நோய் வராது : ஆய்வில் புதிய தகவல்

சிறியோர் முதல் பெரியோர் வரை சொக்லேட் சாப்பிடுவதென்றால் கொள்ளை ஆசை தான். சமீப காலமாக சொக்லேட் சாப்பிடுவது கூடாது என்றே கூறப்பட்டு வந்தது.

சிறுவர் சாப்பிட்டால் பற்களுக்குக் கூடாது என்பார்கள். பெரியோர் என்றால் கொலஸ்ட்ரோல் வரும் என்று அச்சுறுத்தப்பட்டார்கள். பொதுவாக நீரிழிவு நோயுள்ளவர்கள் இதனைச் சாப்பிடவே கூடாது எனக் கூறப்படுவதுண்டு. இனிப்பு அதிகம் என்பதுதான் இதற்குக் காரணம்.

ஆனால் இப்போது சொக்லேட் பற்றிய மற்றுமொரு சுவாரஸ்யமான தகவல் வெளிவந்திருக்கின்றது. அதுதான், தினமும் சொக்லேட் சாப்பிட்டால் இதய நோய் வராது என்பது.

இந்தப் புதிய ஆய்வு இன்று நேற்றல்ல, கடந்த 8 ஆண்டுகளாக லண்டனில் நடத்தப்பட்டு வந்த ஒன்று. 35 வயது முதல் 65 வயது வரை உள்ள 30 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் சுமார் 39 சதவீதமானோருக்கு இதய நோய் பாதிப்பு ஏற்படவில்லை. சொக்லேட்டில் உள்ள கோகோ பீன்ஸ் இரத்தத்தில் நைட்ரிக் அமிலத்தை அதிகரிக்க செய்கிறது. இதன்மூலம் இரத்தநாளங்கள் நன்றாகச் செயல்பட வழியேற்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே இதயநோய் ஏற்பட வாய்ப்பு இல்லை என லண்டன் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில், வழக்கத்தை விட தினமும் 6 கிராம் கூடுதலாக சொக்லேட் சாப்பிடுபவர்களில் 85 சத வீதம் பேருக்கு இதய நோய் பாதிப்பு இல்லை எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அப்படியானால், அதிகளவில் சொக்லேட் சாப்பிடுபவர்களின் இதயம் வலுப்பெறும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை அல்லவா?

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

செய்தி செய்தி யாழ். பல்கலைக்கழகத்தில் வன்னி மாணவன் கருணாநிதி தற்கொலை

யாழ் பல்ககைலக்கழக முகாமைத்துவ பீட மூன்றாம் வருட மாணவன் பா.கருணாநிதி இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். வன்னியில் பூநகரியைச் சேர்ந்த இவர் விடுதலைப் புலிகளின் ஆட்சேர்ப்பிலும் பாதிக்கப்பட்டவர்.
யுத்தம் காரணமாக தனது கல்வியை தொடர முடியாமல் தடைப்பட்ட இவர் பின்னர் நீண்ட காலம் வவுனியா தடுப்பு முகாமிலும் இருந்தவர்.
இவைகளால் மனநிலை பாதிக்கப்பட்ட இவரை அடையளம் கண்டு தெல்லிப்பளை மனநல வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மீண்டும் கல்வியைத் தொடர பல்கலைக்கழக்கத்திற்கு வந்த கருணாநிதி தான் சுகம் அடைந்திருப்பதாக கூறியுள்ளார்.
தனக்கு குறித்த மனநிலை பாதிப்பு இருப்பதை அறிந்து கொண்ட அவர் கடந்த 4 மாதங்களாக கல்வியை கற்று வந்தார். அவரது மனநிலை தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட நிலையிலிருப்பது தெரிந்துள்ளது. இன்று காலை நாச்சிமார் கோயிலடியில் உள்ள தன் அறையில் வைத்து கருணாநிதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வியாழன், 1 ஏப்ரல், 2010

திருக்குறளை மையமாகக் கொண்ட தொலைக்காட்சி தொடர் - டிஸ்னி தயாரிக்கின்றது

பெருந் தமிழ் புலவரும் தத்துவ அறிஞருமான திருவள்ளுவரின் படைப்பான திருக்குறளை மையமாக கொண்ட அசைவூட்ட தொடரை [Animation Serial] ஏப்ரல் 5 ஆம் நாள் முதல் காண்பிக்க அமெரிக்காவின் புகழ்பெற்ற டிஸ்னி சிறுவர் தொலைக்காட்சி பிரிவு [ Disney         Channel ] முடிவு செய்துள்ளது.

முதலில் இந்தியரில் வெளியாகவுள்ள - மிருகங்களின் உருவை பயன்படுத்தி அசைவூட்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த தொடருக்கு ஏக் தா ஜங்கிள் [Ek Tha Jungle] என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த அசைவூட்ட தொடரை சென்னையை சேர்ந்த அக்செல் அனிமேஷன் ஸ்டுடியோஸ் [Accel Animation Studios] என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.

மிகப் பெரும் தொன்மை வாய்ந்த தமிழ் இலக்கியமான திருக்குறளை இளைய சமுதாயத்தினருக்கு கொண்டு சேர்ப்பதே இந்த தொடரின் நோக்கமாகும் என்று டிஸ்னி தெரிவித்துள்ளது.

உலகத்தில் உள்ள அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்ட பொது மறையான திருக்குறள் - முப்பரிமாண [3D] அசைவூட்ட பாணியில் தற்கால வாழ்க்கைககு ஏற்றவாறு தயாரிக்கப்பட்ட முதல் அசைவூட்ட காணொலித் தொடராக இருக்கும் என்று டிஸ்னி-யி்ன் இணை இயக்குநர் தேவிகா பிரபு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

இந்தியர்களின் கதை சொல்லும் கலாச்சாரத்திற்கு உயிரூட்டமாகவும், முற்றிலும் பொழுது போக்கு அம்சங்களை கொண்டதாகவும், அதே நேரத்தில் தற்கால வாழ்க்கைக்குப் பயன்படும் வகையிலும் தாங்கள் அமைத்து வரும் தொடர்களில் இதுவும் ஒன்று என அவர் கூறியுள்ளார்.

இத் தொடர் உலகத்திற்கு பொதுவான கருத்துகளையும் சிறந்த வாழ்க்கைப் பாடங்களையும் வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இத் தொடரின் ஒவ்வொரு கதையும் தற்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் தேவைப்படும் திடமான நெறிமுறைகள், குடும்ப மதிப்பு மற்றும் ஒழுக்க நெறி ஆகியவற்றை கொண்டதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

நம் வரலாறு , கலாச்சாரம், பண்பாடுகளை விவரிக்கும் கதைகளை இன்றைய நவீன கால இளைய சமுதாயத்திற்கு பயன்படும் வடிவில் கொடுப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு முயற்சி இது என்றும், இத் தொடரின் ஒவ்வொரு கதையும் திருக்குறளின் ஒவ்வொரு குறளை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருக்கும் என்றும் தேவிகா பிரபு மேலும் தெரிவித்துள்ளார். 










உலகத்தில் உள்ள பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட - குடும்ப மாண்பினை விளக்கும் முதல் தமிழ் இலக்கியம் திருக்குறள் என்பது குறிப்பிடத்தக்கது.

'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள்

பூகம்பம் வரப்போவதை முன்கூட்டியே அறியும் சக்தி தேரைகளுக்கு உள்ளது என அறிவியல் ஆதாரங்கள் குறிப்புணர்த்துவதாக பிரிட்டனில் உள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இத்தாலியில் ஒரு ஏரியில் இனவிருத்தி செய்வதற்காக கூடிய தேரைகளிடையே ஆராய்ச்சி நடத்திய பிரிட்டனின் திறந்தவெளி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவினர், அருகிலே ஒரு பூகம்பம் ஏற்படுவத்டற்கு ஐந்து நாட்கள் முன்பாகவே, அந்த ஏரியில் இருந்த தேரைகள் எல்லாம் அங்கிருந்து வெளியேறிவிட்டிருந்ததாகக் கூறுகின்றனர்.
பூகம்பம் ஏற்படுவதற்கு முன் நிலத்திலிருந்து வெளியாகும் வாயுக்களை அடையாளம் கண்டு, அத்தேரைகள் வேறு இடங்களுக்குத் அவசர அவசரமாக இடம்மாறியிருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இயற்கைப் பேரழிவு வர இருப்பதை சில விலங்கினங்கள் முன்கூட்டியே அறிந்துவிடுகின்றன என்பதாகத் தெரியும் இந்த விஷயத்தை முதன்முதலாக ஆவணப்படுத்திய ஆராய்ச்சிகளில் இதுவும் ஒன்று என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கீழே தோன்றும் விளம்பரத்தின் மீது கிளிக்கினால் எனக்கு உதவியாக இருக்கும்.

இந்த தளத்தில் பதிவு செய்து நிங்களும் பணம் சம்பாதிக்கலாம்......... sign up and earn 5 doller BuX.ee: You Will Succeed With Us!
Get paid To Promote at any Location

உலக நாடுகளின் நேரங்கள்.....