ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

வடக்கின் போர்: யாழ்.மத்திய கல்லூரி வெற்றி


இறுதி முடிவு யாருக்கு வெற்றி என்று தெரியாத வடக்கின் மாபெரும் கிரிக்கெட் போர் ரதீஸன், ஜெனோஸன் ஆகியோரின் இணைப்பாட்டத்தினால் யாழ்ப்பாணம் மத்திய கல்லுரி 4 விக்கெட்களால் வெற்றி பெற்றது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கிடையிலான வடக்கின் மாபெரும் கிரிக்கெட் போர் 25 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.






நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணித்தலைவர் ஜேம்ஸ் ஜான்ஸன் முதலில் சென்.ஜோன்ஸ் கல்லூரியைத் துடுப்பெடுத்தாடப் பணித்தார். அதற்கிணங்கக் களமிறங்கிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 165 ஓட்டங்களை எடுத்தது. துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஹரிவதனன் 85 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
131 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற வெற்றியிலக்குடன் பதிலுக்குத் தமது இரண்டாவது இனிங்ஸினைத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட் இழப்பிற்கு 32 ஓட்டங்களை எடுத்து இருந்தது.
தொடர்ந்து இன்று மூன்றாவதும் இறுதியுமான நாள் ஆட்டம் தொடர்ந்தது. 50 ஓட்டங்களை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி எட்ட முதல் மேலும் இரண்டு விக்கெட்களை இழந்தது. 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இக்கட்டான நிலையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி இருந்த வேளையில் அணித் தலைவர் ஜேம்;ஸ், ஜெரிக் துஸாந்த் ஆகியோரின் துடுப்பாட்டத்தினால் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்து வந்தது.

இருவரும் களத்திலிருக்க யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் வெற்றி வாய்ப்பு அதிமாகவிருந்தது. எனினும் இருவரும் 41 ஓட்டங்களைப பகிர்ந்த போது ஜேம்ஸ் ஜான்ஸன் 26 ஓட்டங்களுடம் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஜெரிக் துஸாந்தும் 18 ஓட்டங்களுடன் வெளியேற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு மீண்டும் இக்கட்டான நிலை ஏற்பட்டது.








எனினும் இந்த இக்கட்டான நிலையை தமது நிதானமான துடுப்பாட்டம் மூலம் தகர்த்து எறிந்தது ஜனோஸன் - ரதீஸன் ஜோடி. இறுதி நேரத்தில் ரதீஸன் அதிரடியாக அடித்த ஆறு ஒட்டங்களும், ஜனோஸனின் 3 பவுண்டரிகளும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றன.

இறுதியில் 6 விக்கெட்களை மாத்திரம் இழந்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெற்றியடைந்தது. துடுப்பாட்டத்தில் ஜனோசன் 25 ஓட்டங்களையும், ரதீஸன் 14 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் கல்லூரி சார்பாக ஹரிவதனன் 2 விக்கெட்களையும், டக்ஸன், யோகேஸ்வரன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

வடக்கின் மாபெரும் கிரிக்கெட் போரில் சிறந்த களத்தடுப்பாளராக சென்.ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பிரணவனும், சிறந்த துடுப்பாட்ட வீரர், சகலதுறை ஆட்டக்காரராக அதே கல்லூரியைச் சேர்ந்த ஹரிவதனனும், சிறந்த பந்துவீச்சாளராக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த தர்சனும், போட்டியின் ஆட்டநாயகனாக ஜேம்ஸ் ஜான்ஸனும் தெரிவு செய்யப்பட்டனர்.

வெற்றி பெற்ற வீரர்களுக்கான பரிசில்களை போட்டிக்கு அனுசரணை வழங்கிய டயலொக் நிறுவனம் வழங்கியது. இதனைவிட சிறப்புப் பரிசில்களான பணப்பரிசில்களை சமூகநலத்துறை, சமூகசேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வீரர்களுக்கு வழங்கினார்.




இவ்வெற்றியின் மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 27 பிப்ரவரி, 2010

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரம் சுற்றுப்பகுதி தீவு மக்கள் கூட்டம் , கூட்டமாக வி‌சைப்படகு மூலம் புறப்பட்டு வந்தவண்ணம் உள்ளனர்.

போரினால் தடைப்பட்ட திருவிழா

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரினால், 1978இல் நிறுத்தப்பட்ட, கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா, 22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும், 2001இல் நடந்தது. தொடர்ந்து இலங்கை அரசின் ஒத்துழைப்புடன், 2005 வரை நடந்த, அந்தோனியார் திருவிழாவில் மன்னார், நெடுந்தீவு பகுதியிலிருந்தும் ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

2006இல் இலங்கை இராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே, யுத்தம் உக்கிரமாக நடந்ததால் பாதுகாப்பு கருதி, கச்சத்தீவு திருவிழாவை இலங்கை அரசு நிறுத்தியது.

தற்போது, இலங்கையில் அமைதி திரும்பியுள்ள நிலையில், இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர், கச்சத்தீவு திருவிழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கச்சத்தீவில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா, நாளை 28ஆம் திகதி காலை திருப்பலி, தேர்பவனி நிகழ்வுகளுடன் நிறைவு பெறும்.

விழாவில் தமிழகத்திலிருந்தும், பக்தர்கள் பங்கேற்க ஆயர் பேரருட்திரு தோமஸ் சௌந்திரநாயகம் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் மறைமாவட்ட முதன்மை குரு அருட்திரு. ஞானபிரகாசம், சிவகங்கை மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு சூசைமாணிக்கம், ராமேஸ்வரம் வேர்கோட்டு புனித சூசையப்பர் ஆலய பங்குத் தந்தை அருட்திரு மைக்கேல்ராஜ் ஆகியோருக்கு இது குறித்து ஆயர் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

பக்தர்களிடம் கடற்படையினர் சோதனை

இன்று காலை ராமேஸ்வரம் ஒட்டிய பாம்பன், மண்டபம், தங்கச்சி மடம் மற்றும் அருகில் உள்ள தீவு பகுதி மக்கள் ராமேஸ்வரம் வந்தனர். நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் , குடும்பத்தோடு ஆர்வமாக புறப்பட்டுச் வந்தவண்ணம் உள்ளனர்.

இந்திய, இலங்கை கடற்படையினர் பக்தர்களிடம் ‌சோதனை நடத்துகின்றனர். அடையாள அட்டை முக்கியமாக பரிசோதிக்கப்படுகிறது. 2 நாட்கள் விழாவை முடித்து நாளை மறுநாள் பக்தர்கள் ராமேஸ்வரம் திரும்புவர். விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று இலங்கை தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

"வடக்கின் பெரும் போர் " யாழ். மத்திய - சென். ஜோன்ஸ் கல்லூரிகளுக்கிடையிலான முதல் நாள் போட்டி விவரம்

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரார்களின் பந்து வீச்சும் களத்தடுப்பும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியின் ஓட்ட எண்ணிக்கையை மட்டுப்படுத்தியதுடன் விரைவாக ஆட்டமிழக்கவும் செய்துள்ளன.

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி வீரர் ஹரிவதனன் 148 பந்துகளில் 14 பவுண்ட்ரி ஒரு சிக்ஸருடன் 85 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் ஏனைய வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காமையாலும் இறுதி 5 விக்கெட்டுக்கள் 12 ஓட்டங்களில் இழக்கப்பட்டமையாலும் குறைந்த ஓட்டங்களுடன் சென். ஜோன்ஸ் கல்லூரியை ஆட்டமிழக்கச் செய்தது. 



யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை பகல் 10.00 மணியளவில் 104ஆவது போட்டி ஆரம்பமானது. முதல் நாள் போட்டியில் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி 57.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்பத் துடுப்பாளர்களாக களமிறங்கிய ஜெயந்தன் அட்ரின் 2.3 ஓவர்களில் இணைப்பாட்டமாக 04 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில், யாழ். மத்திய கல்லூரியின் ஆரம்ப பந்து வீச்சாளர் வதுசனன் வீசிய 08 பந்துகளில் 02 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து அட்ரினுடன் கஜிவன் இணைந்தார். இவர் 04..2 ஓவர்களில் 06 பந்துகளைச் சந்தித்து ஆறு ஓட்டங்களைப் பெற்ற இருந்து வேளை, ஜெரிக்துசாந் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இணைப்பாட்டமாக 08 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இரண்டாவது விக்கெட் சரிந்தது.

இரண்டாவதாக களமிறங்கிய ஹரிவதனன் அட்ரினுடன் இணைந்து, அவதானமாகத் துடுப்பெடுத்து ஆடிய போதிலும், அட்ரின் 12.4 ஓவரில் 47 பந்துகளில் 18 ஓட்டங்களை பெற்று, வதுசனன் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இணைப்பாட்டமாக 35 ஓட்டங்கள் பெறப்பட்ட நிலையில் மூன்றாவது விக்கெட்டும் இழக்கப்பட்டது.

அடுத்து யோகேஸ்வரன் - ஹரிவதனன் இணைந்தனர். யோகேஸ்வரன் 25.2 ஓவரில் 35 பந்துகளில் 12 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, தர்சன் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இணைப்பாட்டமாக 33 ஓட்டங்கள் பெறப்பட்டிருந்த போது நான்காவது விக்கெட்டையும் இழக்கும்நிலை

நான்காவதாக விதுசன்-ஹரிவதனன் களமிறங்கினர். விதுசன் 38.4 ஓவரில் 33 பந்துகளில் 05ஓட்டங்களை பெற்று, தர்சன் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். ஹரிவதனன் 54 ஓட்டங்களை பெற்று களத்தில் ஸ்திரமான நிலையில் காணப்பட்டார்

ஐந்தாவதாகக் களமிறங்கிய பிரணவன்-ஹரிவதனன் இருவரும் கவனமாகத் துடுப்பெடுத்தாடினர். எனினும் பிரணவன் 51.5 ஓவரில் 35 பந்துகளில் 29 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். ஓட்டங்களின் எண்ணிக்கை 153 ஆனது.

ஆறாவதாக களமிறங்கிய மதுசன்-ஹரிவதனன் இணைப்பாட்டத்தில், மதுசன் 55.3 ஓவரில் 15 பந்துகளில் ஓட்டம் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார். ஓட்ட எண்ணிக்கை 162 காணப்பட்டது. ஹரிவதனன் 84 ஓட்டங்களைப் பெற்று களத்தில் ஸ்திரமான நிலையில் இருந்தார்.

ஏழாவதாக பிரியதர்சன்-ஹரிவதனன் இணைந்து களமிறங்கினர். பிரியதர்சன் 56.2 ஓவரில் 05 பந்துகளில் ஓட்டம் எதுவும் பெறாது ஆட்டமிழந்தார். இணைப்பாட்டமாக 01 ஓட்டம் மட்டுமே பெறப்பட்டது.

எட்டாவதாகக் களமிறங்கிய டக்சன்-ஹரிவதனன் இணைந்து துடுப்பெடுத்தாடினர். ஹரிவதனன் 56.4 ஓவரில் 148 பந்துகளில் 85 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை, ஆட்டமிழந்தார். ஓட்ட எண்ணிக்கை 164.

ஒன்பதாவது ஆட்டக்காரராகக் களமிறங்கிய ஜெருசன்-டக்சன் இணைந்தனர். ஜெருசன் 57.3 ஓவரில் 02 பந்துகளில் ஓட்டம் எதனையும் பெறாது ஆட்டமிழந்தார்.

டக்சன் ஆட்டமிழக்காது ஒரு பந்தை சந்தித்து ஒரு ஓட்டத்துடன் களத்தில் இருந்தார்.

பலத்த எதிர்பார்ப்புடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய யாழ். மத்திய கல்லூரி முதல் நாள் ஆட்ட முடிவில் 34 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் காணப்பட்டது

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக வதுசனன்-திவாகர் களமிறங்கினர். 2. 5 ஓவரில் 08 பந்துகளை சந்தித்து 01 ஒட்டத்தைப் பெற்றிருந்த வேளை, வதுசனன் ஆட்டமிழந்தார்.

முதலாவதாகக் களமிறங்கிய எட்வேட் எடின், திவாகருடன் இணைந்து துடுப்பெடுத்தாடினார். எட்வேட் எடின் 10 ஓவர்கள் நிறைவில் 18 பந்துகளில் 03 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். ஓட்ட எண்ணிக்கை 26 ஆகக் காணப்பட்டது.

இரண்டாவதாகக் கோகுலன் திவாகருடன் இணைந்து ஆடினார். கோகுலன் 11 .5 ஓவரில் 06 பந்துகளைச் சந்தித்து ஒரு ஓட்டத்தைப் பெற்று ஆட்டமிழந்தார். ஓட்ட எண்ணிக்கை 28 ஆனது.

மூன்றாவதாக களமிறங்கிய ஜெரிக் துசாந் திவாகருடன் இணைந்தார். திவாகர் 17.4 ஓவரில் 54 பந்துகளைச் சந்தித்து 26 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். ஓட்ட எண்ணிக்கை 53 ஆகக் காணப்பட்டது.

நான்காவதாக ஜேம்ஸ் ஜக்சன்- ஜெரிக் துசாந் இணைந்து, மிகவும் அவதானமாக விளையாடி 16.2 ஓவரில் 57 ஓட்டங்களைப் பெற்றனர். ஜெரிக் துசாந் 35, ஜேம்ஸ் ஜக்சன 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.

வியாழன், 25 பிப்ரவரி, 2010

அந்தமான் தீவுகளை உரிமை கோர ஸ்ரீலங்கா தீர்மானித்துள்ளது

ஐக்கிய நாடுகள் சபையின் கடற்படுகை உரிமை தொடர்பான புதிய கொள்கையின் கீழ் இந்தியாவுக்குரிய அந்தமான் தீவு, தங்கள் நாட்டுக்குச் சொந்தமான கடற்படுகைக்குள் வருவதாக ஸ்ரீலங்காவின் வெளிவிவகார ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட அந்தமான் தீவுகளை ஸ்ரீலங்கா உரிமை கோர தீர்மானித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கடற்படுகை உரிமை தொடர்பான புதிய கொள்கையின் கீழ் இந்தியாவுக்குரிய அந்தமான் தீவு, தங்கள் நாட்டுக்குச் சொந்தமான கடற்படுகைக்குள் வருவதாக ஸ்ரீலங்காவின் வெளிவிவகார ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே ரோஹித்த போகொல்லாகம இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இந்த விடையம் தொடர்பில் இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னரே இப்பகுதிக்கு உரிமை கோருவது தொடர்பான யோசனையை ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்காவின் கடல்படுகை உரிமைகள் குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே ரோஹித போகொல்லாகம இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவுக்கு ஸ்ரீலங்கா சமர்ப்பிக்கவிருக்கும் உரிமை கோரலானது, தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியான தரவுகளை உள்ளடக்கி மிகச்சரியாக தீர்மானிக்கப்படும் என்றும், ஐக்கிய நாடுகள் சபை இதனை 2025 ஆம் ஆண்டளவில் கவனத்தில் எடுக்கும் என்றும் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இந்த நீண்ட காலதாமதம் குறித்து தமது அதிருப்தியையும் ரோஹத்த போகொல்லாகம வெளியிட்டுள்ளார்.

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

தமிழர் நெஞ்சங்களில் தணல் மூட்டிய தியாகப் பெருஞ்சுடர்களுக்கு வீரவணக்கம்

                                                          ஈழத்தமிழருக்காய் இன்னுயிர் ஈந்தோர்

 "மரித்த எம்மை மண்ணில் புதைதீர்கள் 
   புதைத்த மண்ணை எங்கே தொலைத்தீர்கள்?"

சனி, 6 பிப்ரவரி, 2010

காங்கேயன் வீதி புனரமைப்பு : அழிவுறும் ஆலயங்கள் குறித்து ஆளுநரிடம் கோரிக்கை

  யாழ்.காங்கேசன்துறை வீதியை விஸ்தரிக்கும் போது 27 இந்து ஆலயங்களும், பழம்பெரும் கலாசாரச் சின்னங்களும் அழிவடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த விடயம் குறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள நிபுணர்களுடன் ஆராய்ந்து மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியைக் கொழும்பில் நேற்று நேரில் சந்தித்த இந்துமாமன்றத்தின் தூதுக்குழுவினர் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தினர்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக இந்து மாமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"யாழ். நகரிலிருந்து காங்கேசன்துறை செல்லும் பிரதான வீதியை அகலப்படுத்தி விஸ்தரிக்கும் திட்டமொன்றை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும், இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும் நிலையிலிருப்பதாகவும் தெரியவருகிறது.

இந்த விஸ்தரிப்புத் திட்டத்தின்படி இந்தப் பிரதான வீதியிலுள்ள 27 இந்து ஆலயங்களும், பழம்பெரும் கலாசார நினைவுச் சின்னங்களும் பாதிக்கப்படும் அல்லது அழிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பதை அறிந்து யாழ்.இந்து மக்களும், இந்து நிறுவனங்களும் அதிர்ச்சியடைந்த நிலையில், இது விடயமாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உடனடிக் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

மேற்படி வீதி விஸ்தரிப்புத் திட்டம் தொடர்பாக யாழ்ப்பாணத்திலுள்ள நிபுணர்களிடம் பெறுமதியான மாற்றுத் திட்டங்கள் இருப்பதை அறிவதாகவும், அத்தகைய மாற்றுத் திட்டங்களைப் பாவித்து உத்தேச வீதி விஸ்தரிப்புத் திட்டத்தை மாற்றியமைத்து யாழ்.மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் படியும் அந்த மகஜர் ஊடாக வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், யாழ்.பல்கலைக்கழக சமூகத்துடனும், யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய பிரமுகர்களுடன் கலந்தாலோசித்து இது வியத்தில் நல்ல முடிவு எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்கள்

யாழ் ஆயர் புதுமாத்தளனுக்குப் பயணம்! போரின் கொடூரங்களால் எமது மக்களின் எதிர்காலமே கேள்விக்குறி!

யாழ் மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற புதுமாத்தளன் பகுதிக்கு பயணம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் 29ம் திகதி அவர் புதுமாத்தளன் பகுதிக்கு சென்று அங்குள்ள நிலமைகளை அவதானித்து திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயர் தனது இந்த பயணம் குறித்தம் அங்கு தான் மேற்கொண்ட அவதானிப்புகள் குறித்தும் ஊடகங்களுக்கு எந்த தகவலையும் வெளியிடக் கூடாது என்று அரசாங்க தரப்பு கண்டிப்பான உத்தரவை பிறப்பித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் அங்கு தான் கண்ட போரின் கொடூரங்களும் அழிவுகளும் எமது மக்களின் எதிகாகாலம் குறித்த நம்பிக்கையீனங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஆயர் வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவரிடம் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு எல்லாமே அழிவடைந்து போயுள்ளதாகவும் காணும் இடங்கள் எல்லாம் போரின் கோர முகத்தை காண்பித்து நிற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வன்னியின் மேலும் சில பகுதிகளுக்கும் ஆயர் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வன்னியில் தான் பயணம் செய்த பகுதிகளில் உள்ள மத வழிபாட்டு தலங்கள் அனைத்தும் அழிவடைந்துள்ளதாகவும் மக்களின் வாழ்வாதாரமான வயல் நிலங்கள் பற்றை காடுகளாகி காட்சி தருவதாகவும் வீடுகள் எல்லாம் அழிவடைந்து வெறும் இடிபாடுகள் மட்டுமே மிச்சமிருப்பதாகவும் மக்களின் கால்நடைகள் அனைத்தம் தொலைந்து போயுள்ளதாகவும் ஆயர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

கீழே தோன்றும் விளம்பரத்தின் மீது கிளிக்கினால் எனக்கு உதவியாக இருக்கும்.

இந்த தளத்தில் பதிவு செய்து நிங்களும் பணம் சம்பாதிக்கலாம்......... sign up and earn 5 doller BuX.ee: You Will Succeed With Us!
Get paid To Promote at any Location

உலக நாடுகளின் நேரங்கள்.....