வெள்ளி, 25 டிசம்பர், 2009

நாளை ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள்

ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் உலக மக்களால் நினைவுகூரப்படவுள்ளது. 2004 ஆம்ஆண்டு தாயம் உள்ளிட்ட பலநாடுகளை ஆழிப்பபேரலை தாக்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் தாயகத்தில் யாழ்ப்பணாம் முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட கரையோர மாவட்டங்களை தாக்கிய ஆழிப்பேரலை பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிரிர்களைக் காவுகொண்டது.

                                                பல பன்நாடுகளைத் தாக்கிய ஆழிப்பேரலையால் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளார்கள். இதன் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை டிசம்பர் 26ஆம் நாள் பன்னாட்டு மக்களால் நினைவுகூரப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தின் ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் நினைவாலயம் வடமராட்கி கிழக்கில் உள்ளது. இதில் மக்கள் வணக்கம் செலுத்தவுள்ளார்கள்.

                           இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் காவுகொள்ளப்பட்ட மக்களின் நினைவாலயங்கள் உள்ளன. ஸ்ரீலங்காப் படையினரின் வல்வளைப்பு காரணமாக ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் நினைவாலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவின் முள்ளியவளை கஜட்டையடி என்னும் இடத்திலும் புதுக்குடியிருப்பிலும் இன்நினைவாலயங்கள் தமிழ்மக்களால் கட்டப்பட்டு நினைவுகூரப்பட்டது.இம்மக்கள் தற்போது வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இன்நிலையில் முள்ளிவாய்காலில் உயிரிழந்தவர்களைகூட நினைவுகூர முடியாத அளவிற்கு ஸ்ரீலங்காப்படையினரின் அடக்கு முறைக்குள் மக்கள் அடைபட்டுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சனி, 19 டிசம்பர், 2009

தமிழீழத்துக்கான வாக்கெடுப்பினால் அதிர்ச்சி! முறியடிப்பதற்கு சிங்கள புத்திஜீவிகள் அரசுக்கு ஆலோசனை!!

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களினால் எல்லா நாடுகளிலும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழீழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு ஐக்கிய இலங்கைக்கு பாரிய ஆபத்தாக மாறவுள்ளது. ஆகவே, புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் மேற்கொண்டுவரும் இந்த நடவடிக்கைக்கு சமாந்தரமாக சிறிலங்கா அரசு வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை தேர்தல் முடிவடைந்த கையோடு வேகமாக ஆரம்பிக்கவேண்டும் என்று சிங்கள புத்திஜீவிகள் சிலர் சிறிலங்கா அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள சிங்கள மக்கள் மத்தியில் இனவாத கருத்துக்களை விதைத்துவரும் குமார் மேசஸ், வோல்டர் ஜெயவர்த்தன போன்ற சிங்கள இனவாத புத்திஜீவிகள் குழுவே இந்த ஆலோசனையை சிறிலங்கா அரசுக்கு வழங்கியுள்ளது.
அந்த ஆலோசனையில் அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது:-
புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் எனப்படும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சிறிலங்காவில் விடுதலைப்புலிகளின் அமைப்பின் வீழ்ச்சிக்கு பின்னர் சளைத்துவிடவில்லை. தமது மக்களுக்கான சுயநிர்ணய உரிமைக்கு சர்வதேச அளவில் ஆதரவு தேடும்வகையில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்திவருகிறார்கள்.
அந்தந்த நாடுகளில் உள்ள அரச அதிகாரிகளின் அனுசரணையுடன் அந்நாட்டு தேர்தல் கண்காணிப்புடன் முறையான தேர்தலாக இதனை நடத்தி அந்த முடிவுகளை அந்நாட்டு அரசுக்கு சமர்ப்பித்துவருகிறார்கள். இது அவர்களது மிகப்பெரிய ஒரு நடவடிக்கையாகவே சிறிலங்கா பார்க்கவேண்டியுள்ளது.
ஏற்கனவே இவ்வாறான தேர்தல்கள் இரண்டு நடைபற்று முடிந்துவிட்டன. இன்னொன்று எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அடுத்த 12 மாதங்களினுள் மொத்தம் நான்கு தேர்தல்களை நடத்தி முடிக்கும் நோக்குடன் துரித கதியில் புலம்பெயர்ந்துவாழும் மக்கள் செயற்பட்டுவருகிறார்கள்.
நீதியாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட்ட இந்த தேர்தல் முடிவுகள் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் உண்மையான அபிலாஷை என்ற விடயத்தை சர்வதேச சமூகத்தை நம்பவைப்பதற்கான முயற்சியாகவே இந்த தேர்தல்கள் மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்கு சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் பதில் நடவடிக்கை மிக மெதுவானதாகவே காணப்படுகிறது.
தேர்தல்கள் முடிவடைந்த கையோடு உடனடியா – துரித கதியில் – வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை ஆரம்பிக்கவேண்டும். அங்கு தமிழ்மக்களின் அடையாளங்களை முற்று முழுதாகவே அழித்தொழிக்கும் வகையில் காரியங்களை நிறைவேற்றிவிட்டால், சர்வதேச ரீதியில் தமிழ்மக்களின் உணர்வுகள் இயற்கை மரணத்தை அடைந்துவிடும். அதற்கு பிறகு சிறிலங்கா அரசே ஏதாவது தமிழ் மக்களுக்கு தருவதாக அறிவித்தால் கூட அதனை ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் தயாராக இருக்கமாட்டார்கள்.
சிறிலங்காவின் தேசப்பற்றாளர்கள் அனைவரும் அரசு மேற்கொள்ள வேண்டிய இந்த நடவடிக்கைக்கு வேகமாக உழைக்கவேண்டும். விடுதலைப்புலிகளை அழித்தொழித்த அதே வேகத்துடன் இந்த நடவடிக்கையும் அமையவேண்டும்.

- என்று அந்த இனவாத சிங்கள குழு அரசுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது.

வியாழன், 3 டிசம்பர், 2009

PICTURE OF THE YEAR...................................


எவ்வளவு கருணை உள்ள மனசு................இதுவோ தாய்மை ?  

செவ்வாய், 1 டிசம்பர், 2009

உலகை ஆட்டிப்படைக்கும் எயிட்ஸ்! : இன்று சர்வதேச எயிட்ஸ் தினம்

ஓடும் இயந்திரங்களுடன் தானும் ஒரு இயந்திரமாகவே மாறிக் களைத்து போகும் மனிதன்; விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் விந்தைகள் செய்து கொண்டிருக்கும் விஞ்ஞானம் - இவற்றோடு பின்னிப் பிணைந்து நாளுக்கு நாள் மேம்பட்டுக் கொண்டிருக்கும் மனித குலத்தின் அபிவிருத்தி புதியதொரு வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகின்றது.

அறிவியில்,தொழில்நுட்பம், நாகரிகம் என அனைத்துத் துறைகளும் புதுமைகள் படைக்கும் களங்களாக மாறியிருக்கும் இக்காலகட்டத்தில் இவை எல்லாவற்றுக்கும் சவாலாக விளங்கும் விடயங்களும் இருக்கவே செய்கின்றன.

அதில் பிரதானமாக சொல்லப்படுபவற்றில் முக்கிய இடம் வகிப்பது `எயிட்ஸ்` எனப்படும் உயிர்க்கொல்லி நோய் என உறுதியாகக் கூறலாம்.

இயற்கையை மனிதன் வெல்ல முடியாது என்பது போல், இந்தக் கொடிய நோயையும் வெற்றிகொள்ள முடியாமல் உலகம் இன்று தடுமாறிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

வேற்றுக்கிரகங்களில் புகுந்து சாதனை செய்து கொண்டிருக்கும் விஞ்ஞானத்தால், மனிதனுக்குள் புகுந்து உயிர்க்கொலை செய்யும் இந்த கொடிய நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லையே...?

ஆம்! சர்வதேச எயிட்ஸ் தினமான இன்று இந்த நோய் எந்தளவுக்கு உலகப்பரம்பலில் தாக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது என்பதனையும் அதன் பின்விளைவுகளால் உலகம் எதிர்கொள்ளப்போகும் சவால்கள் பற்றியும் கட்டாயம் தெரிந்தாக வேண்டும்.

33.4 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோய் பீடிப்பு

உலகத்தில் 33.4 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயுடன் வாழ்வதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கிறது.

2008 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் படி, வயதுவந்த சுமார் 31.3 மில்லியன் பேர் இந்த நோயுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 15.7 மில்லியன் பெண்களும் அடங்குவதாக அக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அதைவிட கவலைதரக் கூடிய விடயமாக கொள்ளப்படுவது எதுவெனின், காரணம் எதுவுமின்றி 2.1 மில்லியன் எண்ணிக்கையிலான சிறுவர்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பதுதான்.

2008 ஆம் ஆண்டில் மாத்திரம் 2.7 மில் லியன் மக்கள் புதிதாக இந்த நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பதுடன் 4 லட்சத்து 30ஆயிரம் சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு மில்லியன் மக்கள் கடந்த 2008ஆம் ஆண்டில் எயிட்ஸ் நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 2 லட்சத்து 80 ஆயிரம் சிறுவர்களும் இந்நோயால் மரணமாகியுள்ளனர்.

எனினும் கடந்த எட்டு ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2009 ஆம் ஆண்டு 17 வீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கைகளிலிருந்து தெரியவருகிறது.

இலங்கையைப் பொருத்தவரை அண்ணளவாக 15 வயதுக்கு மேற்பட்ட 4000 பேரும் 15 வயதுக்குக் குறைந்த 50 பேரும் எச்ஐவி-யினால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

2008 ஆம் ஆண்டில் 1023 பேர் எயிட்ஸ் நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் 2009 ஆம் ஆண்டு முதல் 9 மாதங்களில் மாத்திரம் 1127 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை சுகாதார அமைச்சின் எயிட்ஸ் நோய்த் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

விஞ்ஞானம், மருத்துவம் உள்ளிட்ட ஏனைய அனைத்து விடயங்களிலும் புரட்சியை ஏற்படுத்தியதாக 20ஆம் நூற்றாண்டு பிரஸ்தாபிக்கப்படுகிறது. அணுவாயுதம் முதல் விண்வெளிப் பயணம் வரை காத்திரமான பல மாற்றங்கள் இந்த நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

மருத்துவத்துறையை ஆட்டிப்படைக்கும்...

எவ்வாறாயினும் 20 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் உலக மருத்துவத் துறையை கலங்க வைத்து, இன்றுவரை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நோயாக எயிட்ஸ் காணப்படுகிறது.

எயிட்ஸ் என்ற நோய்க்கு எச்.ஐ.வி. என்ற வைரஸ்தான் காரணம் என முறையான மருத்துவ பரிசோதனைகள் மூலம் 1981 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்நோய் பரவியிருக்கக் கூடிய வாய்ப்பு இருந்துள்ளது. 1981 ஆம் ஆண்டுமுதல் இன்றுவரை 25 மில்லியன் மக்கள் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர்.

பொதுவாக, உடலுறவு கொள்ளுதலில் மாத்திரமே எச்ஐவி தொற்றுவதாக பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவ்வாறு நோயினால் பாதிக்கப்பட்டவர்களிடம் நெருங்கிப் பழகவும் அச்சம் கொள்கிறார்கள்.

உடலுறவினால் எச்ஐவி தொற்று உண்டாவது பிரதான காரணமாக உள்ளபோதிலும் அதுமட்டும் காரணம் எனச் சொல்லிவிட முடியாது. ஓரினச் சேர்க்கை, இரத்தம் பரிமாறப்படுதலினூடாக பரவுதல் மற்றும் தாய் சேய் உறவினூடாக தொற்றுதல் போன்ற ஏனைய காரணங்களும் உண்டு.

இந்த வைரஸ் பீடிக்கப்பட்ட நபருடன் நெருங்கிப் பழகுவதன் மூலமோ அல்லது அவர்கள் பயன்படுத்திய பொருட்களை உபயோகிப்பதாலோ நோய் தொற்றி விடுவதில்லை.

ஒருவரின் உடல் திரவங்கள் மற்றொருவரின் உடல் திரவத்துடன் சேரும்போது இக்கிருமி பரவுவதற்கு அதிக வாய்ப்பு ஏற்படுகிறது. அதனால்தான் உடலுறவை பிரதானப்படுத்திப் பார்க்கிறது உலகம்.

பாதுகாப்பற்ற உடலுறவு முறைகள், ஈடுபாடுகள் என்பன இந்த வைரஸை பரிமாற்றம் செய்து விடுகின்றன. அதனால் ஏற்படும் பின்விளைவு தான் ஒரு தனிமனிதனை கொஞ்சம் கொஞ்சமாக மரணம் வரை கொண்டு செல்கிறது.

எச்ஐவி எனும் வைரஸ் மனித உடம்பிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை மெதுவாக குறைக்கிறது. அதனால், ஈடுசெய்ய முடியாத பல்வேறு நோய்களால், பீடிக்கப்படும்போது அவற்றை எதிர்க்கக் கூடிய திரவச் சுரப்புகள் இன்றி மரணம் நேரிடுகிறது.

இந்தத் தொற்றுக்கு உள்ளாகிய நபர் இன்னும் பலருடன் உடலுறவுச் சேர்க்கையில் ஈடுபடுவதனால் மேலும் பலருக்கு அது பரவ ஆரம்பிக்கின்றது.

மாபெரும் சவால்

எனவேதான், உலகம் இன்று மாபெரும் சவால் ஒன்றை எதிர்நோக்கியிருக்கிறது.

இரத்தத்தில் 10 வீதம் எச்ஐவி அதிகரிப்பு ஏற்படுமாயின் அதனால் 81 வீதம் நோய் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக புற்றுநோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படின் இந்த உயிர்க்கொல்லி நோய் மரணத்தை மேலும் துரிதப்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எச்ஐவியை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய மருந்துகள் கண்டறியப்பட்டுள்ள போதிலும், அதனை நீண்டகால நோக்கில் குணமாக்கக் கூடியதாகவோ அல்லது தொடர்ச்சியான ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ளக் கூடியதாகவோ மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

போதியளவு விழிப்புணர்ச்சி இல்லாமல் இந்த நோயைத் தொடர்வதற்கு வழி செய்யப்படுமானால், குறிப்பிட்டதொரு காலப்பகுதியில் பாரியதொரு சனத்தொகை அழிவு ஏற்படும் என்பது மட்டும் நிச்சயம்.

நடைமுறை வாழ்வில் தன்னைத் தானே காத்துக்கொள்வதுதான் சிறந்த மருந்து என்றும் நம்பிக்கையுடனான உறவுகளை வளர்த்துக்கொள்ளுதலும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுதலும் கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்று என்றும் மருத்துவத்துறை, உலகத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றது.

முழு உலகத்தையும் அழிப்பதற்கு மேற்குலகத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் ஆயுதம் `எயிட்ஸ்` தான் என்றே கூறப்படுகிறது. மனித இனத்தை மெதுமெதுவாக அழித்துக் கொண்டிருக்கும் எயிட்ஸ் எனும் அரக்கனை அழிக்க ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் செயற்படுதலே காலத்தின் தேவையாகும்.


thanks virakesari

கீழே தோன்றும் விளம்பரத்தின் மீது கிளிக்கினால் எனக்கு உதவியாக இருக்கும்.

இந்த தளத்தில் பதிவு செய்து நிங்களும் பணம் சம்பாதிக்கலாம்......... sign up and earn 5 doller BuX.ee: You Will Succeed With Us!
Get paid To Promote at any Location

உலக நாடுகளின் நேரங்கள்.....