ஞாயிறு, 9 மே, 2010

நிலைமைகளை ஆராய்வதற்காக நாணய நிதியக் குழு இலங்கை விஜயம்

இலங்கையின் தற்போதைய சூழ்நிலைகளை அவதானிக்கும் முகமாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். எதிர்வரும் 12 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னைய நாள்களில் அவர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் மூன்றாம் தவணைக் கடன் கொடுப்பனவு தொடர்பாக ஆராயும் பொருட்டே இக் குழு இலங்கைக்கு வருகை தரவுள்ளது. அத்துடன் இலங்கையில் வரவு-செலவுத் திட்டம் தொடர்பிலும் இக் குழு ஆராயவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் இலங் கைக்கு 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக வழங்கப்படவிருந்தது.

இக் கொடுப்பனவில் முதலாம் கட்டக் கொடுப்பனவாக 312 மில்லியன் டொலர்க ளும் இரண்டாம் கட்டக் கொடுப்பனவாக 323 மில்லியன் டொலர்களும் வழங்கப்பட்டன. மூன்றாம் கட்டக் கொடுப்பனவு குறித்து தேர்தலின் பின்னர் வழங்குவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பிலும் தற்போது இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியம் பேச்சுவார்த்தைளை நடத்தவுள்ளதா கவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கீழே தோன்றும் விளம்பரத்தின் மீது கிளிக்கினால் எனக்கு உதவியாக இருக்கும்.

இந்த தளத்தில் பதிவு செய்து நிங்களும் பணம் சம்பாதிக்கலாம்......... sign up and earn 5 doller BuX.ee: You Will Succeed With Us!
Get paid To Promote at any Location

உலக நாடுகளின் நேரங்கள்.....