ஞாயிறு, 28 மார்ச், 2010

சாவகச்சேரியில் 13 நாள்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட மாணவன் நேற்றுச் சடலமாக மீட்பு! குடாநாட்டில் பெரும் பீதியும் பரபரப்பும்!!

சாவகச்சேரி, பெரிய அரசடிப் பகுதியில் பதின்மூன்று நாள் களுக்கு முன்னர் கடத்தப்பட்ட பதினாறு வயது மாணவனும் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகனுமான திருச்செல்வம் கபில நாத்தின் சடலம் நேற்றுப் பிற்பகலில் நகரப் பகுதியில், டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வாழைத்தோட்டத்தில

யாழ்ப்பாணம், மார்ச் 28
சாவகச்சேரி, பெரிய அரசடிப் பகுதியில் பதின்மூன்று  நாள் களுக்கு முன்னர் கடத்தப்பட்ட பதினாறு வயது மாணவனும் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகனுமான திருச்செல்வம் கபில நாத்தின் சடலம் நேற்றுப் பிற்பகலில் நகரப் பகுதியில், டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வாழைத்தோட்டத்தில் புதைகுழி யில் இருந்து மீட்கப்பட்டது.
கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளைத் தொடர்ந்து சடலம் புதைகுழியில்  இருந்து மீட்கப்பட்டது.
மாணவன் கபிலநாத் கடத்தப்பட்ட பின்னர் மூன்று கோடி ரூபா கப்பம் தருமாறு அவரின் பெற்றோர் அச்சுறுத்தப்பட்டனர் என்று ஊர்ஜிதப்படுத் தப்படாத தகவல்கள் தெரிவித்தன.
குடாநாட்டில் சற்று அமைதி நிலை தோன்றிவரும் இவ்வேளையில், மேற்படி  சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பீதியையும் பரபரப்பையும் தோற்றுவித்திருக்கிறது.
இந்தச் சம்பவத்தில் படுகொலை செய் யப்பட்டவர் அருள் விநாயகர் மோட்டோர்ஸ் உரிமையாளர் எஸ்.திருச்செல்வத்தின் மக னான கபிலநாத் (வயது 16) என்பவரா வார். இவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஜி.சீ.ஈ (சாதாரண) தர வகுப்பு மாணவன். கடந்த டிசெம்பரில் நடைபெற்ற பரீட் சைக்குத் தோற்றியிருந்தார்.
இந்தச் சம்பவம் பற்றித் தெரியவந்துள் ளவையாவது:
இம்மாதம் 14ஆம் திகதி இரவு அவரது வீட்டுக்கு வந்த சிலர் இவரது பெயரைக் கூறி வெளியே அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் அன்று இரவு தொலை பேசியில் தொடர்புகொண்டு மூன்று கோடி ரூபா கப்பம் தந்தால் விடுதலை செய் வோம் என்று கடத்தியவர்கள் தெரிவித் துள்ளனர். தேர்தல் பணிக்காகவே இந்தப் பணம் கேட்பதாக, சில கட்சிகளின் சின் னங்களைக் கூறி கடத்தல்காரர் கப்பம் கோரினர்.
நண்பர்கள் மூவர் கைதாகினர்
இந்தச் சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு அவரது நண்பர்களான மூவரைக் கைது செய்தனர். அவர்களில் இருவர் ஜி.சீ.ஈ (உயர்தர) வகுப்பு மாணவர்கள். மற்றைய வர் ஜி.சீ.ஈ (சாதாரண) வகுப்பு மாணவன். மூவரும் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று வந்தனர்.
உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவ ரும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறும் பரீட்சைக்குத் தோற்றவிருக்கின்றனர். மற்ற மாணவன் கடந்த டிசெம்பர் மாதம் சாதா ரண தரப்பரீட்சைக்குத் தோற்றியிருந்தார். பொலிஸார் கைது செய்த பிரஸ்தாப மாண வர்கள் சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற அனுமதியுடன் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரிக் கப்பட்டனர்.
கொழும்பில் இருந்து
விசேட பொலிஸ் குழு
கொழும்பில் இருந்து வருகை தந்த விசேட பொலிஸ் கோஷ்டி பிரஸ்தாப மாண வர்கள் மூவரையும் விசாரணை செய்து வந்தனர். இந்த விசாரணையின் தொடர்ச்சி யாக கைது செய்யப்பட்ட மாணவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்க ளில் உயர்தர வகுப்பு மாணவனான யோக நாதன் காண்டீபன் என்பவரின் வீட்டை சுற்றிய பகுதியை பொலிஸாரும் இராணு வத்தினரும் இணைந்து நேற்று முன் தினம்  தேடுதல் நடத்தினர்.
அந்த மாணவனின் வீடு சாவகச்சேரி ஆஸ்பத்திரிக்கு அருகில் உள்ள தனியார் ஒழுங்கை ஒன்றில் அமைந்துள்ளது. நக ரில் இருந்து 500மீற்றர் தூரத்தில் டச்சு வீதியை அண்டியதாக அந்த ஒழுங்கை உள் ளது.
சம்பவ இடத்துக்கு நீதிவான்
நேற்றுப்பிற்பகல் ஒரு மணியளவில் டச்சு வீதி மற்றும் அண்டிய அந்த ஒழுங்கை ஆகிய பகுதிகளை சுற்றிவளைத்த பொலி ஸார் அந்தப் பகுதிக்குள் எவரும் உள் செல்லக்கூடாது என்று தடைவிதித்தனர்.
சாவகச்சேரி நீதிவான் ரி.ஜே.பிரபா கரன் சம்பவ இடத்துக்குச் சென்றார். அவ ரது முன்னிலையில் குறிப்பிட்ட மாண வனின் வீட்டுக்கு பிற்புறமாகவுள்ள வாழைத் தோட்டத்தில் புதைகுழி ஒன்று தோண்டப் பட்டது. மூன்று அடி ஆழமுள்ள அந்தப் புதைகுழிக்குள் இருந்து அழுகிய நிலை யில் சடலம் மீட்கப்பட்டது. தமது மகனின் சடலம் என உறவினர் சடலத்தை அடை யாளம் காட்டினர்.
யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியை சம்ப இடத்துக்கு அழைத்து சடலத்தை பிரேத பரிசோத னைக்காக ஒப்படைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
நேற்று மாலை 5.30மணிளவில் சம்பவ இடத்துக்குச் சட்ட வைத்திய அதிகாரி சென் றார். சடலம் யாழ்.ஆஸ்பத்திரிக்கு எடுத்து வரப்பட்டது.
பிரஸ்தாப வீட்டில் வசித்து வரும் உயர் தர பரீட்சை மாணவனின் தந்தை வெளி நாட்டில் உள்ளார். அவரது மனைவி தனது மற்றொரு மகனை கொழும்புக்கு அழைத் துச் சென்றார். அப்போது உயர்தர வகுப்பு மாணவன் மட்டும் வீட்டில் இருந்தார்.
இறந்தவர் கடத்தப்படுவதற்கு முதல் நாள் கொழும்பு சென்ற உயர்தர வகுப்பு மாணவனின் தாயார் மகனைக் கைது செய்த செய்தி கேட்டு மறுநாளே சாவகச் சேரிக்கு திரும்பியிருந்தார்.
பெரும் எண்ணிக்கையானவர்கள், அரசியல்கட்சிகளின் பிரமுகர்கள் அங்கு கூடிய போதும் சடலத்தைப் பார்வையிட பொலிஸார் எவரையும் அனுமதிக்க வில்லை.
குடாநாட்டில் வன்செயல்கள் சற்றுக் குறைந்து வரும் வேளையில் இச் சம்பவம் குடாநாடு முழுவதும் பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கீழே தோன்றும் விளம்பரத்தின் மீது கிளிக்கினால் எனக்கு உதவியாக இருக்கும்.

இந்த தளத்தில் பதிவு செய்து நிங்களும் பணம் சம்பாதிக்கலாம்......... sign up and earn 5 doller BuX.ee: You Will Succeed With Us!
Get paid To Promote at any Location

உலக நாடுகளின் நேரங்கள்.....